திங்கள், 7 ஜனவரி, 2019

January 8, 2019

👉 👉 வரலாற்றில் இன்று 👈 👈

                 🌸 January 8, 2019 🌸

                  🌸 நிகழ்வுகள் 🌸

1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது.

1782 – திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1806 – கேப் கொலனி பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.

1815 – அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.

1838 – ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.

1838 – அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.

1867 – வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1889 – ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.

1900 – அலாஸ்கா இராணுவ ஆட்சியில் வந்தது.

1902 – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1906 – நியூ யோர்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் கிண்ட்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

1908 – நியூ யோர்க் நகரில் பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1912 – ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

1926 – அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

1956 – எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

1959 – பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1962 – நெதர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

1973 – சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 – ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

1996 – சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.

2008 – கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம்.தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

                   🌸 பிறப்புகள் 🌸

1867 – எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

1891 – வால்தர் போத், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)

1899 – எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)

1899 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1978)

1935 – எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)

1942 – ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்

1942 – ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்

1976 – பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

                      🌸 இறப்புகள் 🌸

1324 – மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)

1642 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)

1941 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)

1997 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)

2002 – அலெக்சாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)

2008 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர்

👉 🌴🌴🌴🌸🌸🌸🌴🌴🌴 👈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...