பிரசுரிக்கப்பட்டவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரசுரிக்கப்பட்டவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 மே, 2016

புதன், 30 செப்டம்பர், 2015

இன்ப அதிர்ச்சி


தினத் தந்தி "குடும்பமலர்" ல்  வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி 






சனி, 12 ஏப்ரல், 2014

சொக்கன்

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ







மருத்துவமனையில் பிரசவ வலியுடன் தவித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவை விட அவள் கணவனுக்கு தான் தவிப்பு அதிகமாக இருந்தது. என்னென்றால் அவன் கூட பிறந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் மட்டுமல்லாமல் இவனுக்கு பிறந்த  முதல் குழந்தையும்  பொட்ட புள்ளையா பொறந்ததால்  இனி அவங்க குடும்பத்துக்கே கொள்ளி போடா வாரிசு இல்லை என்று கேலியும் கிண்டலுமாக பேசினார்கள்.

"இந்த குழந்தையாவது ஆம்பளை புள்ளையா பொறக்கலைன்னா எல்லோரும் என்ன சொல்லுவாங்களோ என்னமோ" என்றாள் வருத்தம் கலந்த குரலில் கண்ணம்மா.

"அட சும்மா இரு கண்ணம்மா,ஊரார் பேசுராங்கனோ உறவுங்க ஏசுராங்கனோ நாம கவலை பட்டு என்ன செய்யுறது? கடவுளா பார்த்து கண்ணு திறந்தா தான் உண்டு" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னானே தவிர அவனுக்கும் அதே கவலை தான்.

கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தான்.

நர்ஸ்சம்மா வந்து உங்களுக்கு "பையன் பொறந்திருக்கான்னு" சொன்னதும் அவனுக்கு சந்தோசத்துல தல காலு புரியல.

கொழந்தைய பார்த்ததும்"டேய் மணி, எங்கப்பன் அந்த சொக்கன் தான் உனக்கு மகனா வந்து பிறந்திருக்கார்"என்று பெருமிதத்துடன் சொன்னாள் அவன் அம்மா குருவம்மா.

மணியும் அவன் மனைவியும் ரயில் வண்டிக்கு கரி அள்ளி போடுபவர்கள் போல் அட்டை கருப்பு. அவர்களுக்கு பிறந்த பொட்ட புள்ளையும் அவர்களை அச்சு வார்த்தது போல பிறந்தாள்.இப்போ தங்கம் மாதிரி பொன் நிறத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அந்த கடவுள் சொக்கனோட அருளால மூக்கும் முழியுமாய் ஒரு ஆம்பளை புள்ளை பொறந்திருச்சு.

மணிக்கு சந்தோசத்தில் கால்கள் தரையில் நிற்க வில்லை.தன் மகனை கையில் வைத்துக் கொண்டு தன் மனைவியை பார்த்து,
"ஏ புள்ள, நம்ம புள்ளைய பார்த்தியா? தோரா மாதிரி இருக்கான் இல்ல?"என்று பெருமிதத்துடன் மீசையை முறுக்கினான்.

அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள்.

"ஆத்தா இவனுக்கு என்ன பெயர் வெக்கலாம்?" அவன் அம்மாவிடம் கேட்டான்.

 "எங்க அப்பன் சொக்கன் பேரையே வை" என்றாள் வெற்றிலையை மென்றுக் கொண்டிருந்த குருவம்மா.

"அட போ ஆத்தா, என் மகன் ராசா மாதிரி இருக்கான் அவனுக்கு போய் சொக்கன்,குப்பன்னு பேரு வெக்க சொல்றியே.உனக்கு ஒன்னும் தெரியல ஆத்தா. அவனுக்கு ஸ்டைலா பேரு வெட்க போறேன்."என்று கடிந்துக் கொண்டு தன் மகனை கையில் அள்ளிக் கொண்டு கொஞ்சினான்.

"டேய் மணி,அது நம்ம குலதெய்வத்தொட பேருடா. அப்படி எல்லாம் சொல்லாதே தெய்வ குத்தம் ஆயிடும்" என்றாள் 

மணி அதை காதில் வாங்காமல் தன்  மகனை கொஞ்சிக் கொண்டிருந்தான். பின்னர் ஊரிலிருக்கும்  அவனுடைய சகோதரர்களுக்கு போன் செய்து
"அண்ணா நம்ம குடும்பத்துக்கு வாரிசு பிறந்தாச்சு" மகிழ்ச்சியோடு  சொன்னான்.

பிறகு "ஆத்தா நான் போய் புள்ளைக்கு துணிமணி வாங்கிட்டு வரேன்"என்று தனது சைக்கிளை கிளப்பினான்.

கடைக்கு சென்றவன் அங்கு கண்ணில் பட்டதை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்தான்.

தன மகனை கையில் தூக்கிக் கொண்டு "ராசு குட்டிக்கு அப்பா என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு.இது சட்டை, இது தொப்பி, இது உனக்கு குளிராம இருக்குறதுக்கு சொட்டறு இத பார்த்தியா யானை பொம்மை, யானை வருது யானை வருது"என்று அவன் பாட குழந்தை சிரித்தது.

"புள்ள மேல எம்புட்டு பாசமோ பாரு இவனுக்கு"என்று சிரித்தபடி வெற்றிலை போட சென்று விட்டாள் குருவம்மா.

அப்பா புள்ளை விளையாட்டை ரசித்தபடி தூங்கிவிட்டால் அவன் மனைவி.

ஒரு நர்ஸ் வந்து "சார், குழந்தையை கொடுங்க டெஸ்ட் பண்ணனும்"என்றாள்.
விளையாடி கொண்டிருந்த அவன் "நாம அப்பறம் விளையாடலாம்."என்று அவளிடம் குழந்தையை கொடுத்தான்.

 நர்ஸிடம் குழந்தையை கொடுத்து விட்டு பொம்மைகளோடு பேசி கொண்டிருந்தான் அவன்.

வெற்றிலையை போட்டுவிட்டு சிவந்த வாயோடு வந்த குருவம்மா, மணி மட்டும் தனியாக பொம்மைகளோடு பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போய் "என்னடா தனியா பேசிகிட்டிருக்கே?புள்ள எங்கே?"என்றாள்.

"நர்ஸம்மா செக்கப்புக்கு கொண்டு போயிருக்காங்க" என்றான் சாதாரணமாக.

"செக்கப்பா என்ன செக்கப்பு?" என்று பதட்டத்தோடு சத்தமாக கேட்க தூங்கி கொண்டிருந்த அவன் மனைவி விழிக்க எல்லோரும் சேர்ந்து போய் டாக்டரிடம் தகவல் சொன்னார்கள்.

அப்படி எந்த நர்சும் குழந்தையை தூக்கி வரவில்லை என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்து போயினார்கள்.

அங்கு வேலை செய்யும் அனைத்து உழியரும் ஒன்று திரண்டு நின்றனர்.மணி அவர்களில் குழந்தையை வாங்கி சென்றவரை அடையாளம் காண முற்பட்டான் ஆனால் அந்த பெண் சாயலில் அங்கு யாரும் இல்லை.

குழந்தை கடத்தப்பட்ட தகவல்  போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது.

"ஐயோ,பிரவேட்டு ஆஸ்பத்திரிக்கு போனா காசும் புடுங்கிட்டு சுக பிரசவம் ஆக விடாம ஆபரேசன் செய்யுறாங்கன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வந்தா இங்க இப்படி குழந்தையகடத்திட்டாங்கலே. நான் என்ன செய்வேன் கடவுளே.இப்போ புள்ளைய நான் எங்கே போய் தேடுவேன்" என்று கதறினாள் கண்ணம்மா.

"அப்பனே சொக்கா, குடும்பத்துக்கு கொல்லி போடா வாரிசு பொறந்திருக்குனு சந்தோசபட்டேனே.அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நிலைக்காம இப்படி பண்ணிட்டியே " குமுறினாள் குருவம்மா.

  "அப்பனே சொக்கநாதா, சொக்கன்னு பேரு வெக்கமாட்டேன்னு சொன்னதுக்கா இப்படி பண்ணிட்டே? உனக்கு தான் ஸ்டைல ஆயிரம் பேரு இருக்கே?என் கையாலேயே என் புள்ளையை தூக்கி கொடுக்க வெச்சிட்டியே?"என்று கதறி அழுதான்.

அதற்குள் போலீசாரும் பத்திரிகைகாரர்களும் மருத்துவமனையை சூழ்ந்தனர்.

புள்ளையை பரிகொடுத்த துக்கத்தில் இருந்தவர்களிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டனர்/

மணி உடைந்து போனான்.ஆஸ்பத்திரியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் குழந்தையை எடுத்துச் சென்றவர்களின் முகம் பதிந்திருக்கும் என்று ஒரு மருத்துவர் கூற "குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது அவர்கள் மனதில்.

போலீசார் கண்காணிப்பு கேமராவை சோதனையிட்ட போது அது கடந்த பல மாதங்களுக்கு முன்பாக பழுதாகி விட்டதால் அதிலுள்ள ஹர்டு டிஸ்க் கழற்றப்பட்டு விட்டது என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

"யார் கண்பட்டதோ என்னவோ. அப்பனே சொக்கா"என்று கதறினால் குருவம்மா.

நொந்து போன மணி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
கால்கள் போன போக்கில் சைக்கிளை மிதித்தான். அவன் மனதில் பூத்த சந்தோச பூவை யாரோ பறித்து விட்டார்கள்"

ட்ராபிக்கில் நின்றிருந்த போது ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.
புள்ளையை தொலைத்த அவன் மனம் அவன் நினைவுகளையே அசை போட்டது. அந்த சின்ன சின்ன பிஞ்சு விரல்களால் அவன் வருடும்  போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திராட்சை போன்ற அழகிய கண்கள் என்று அவனையே சுற்றி சுற்றி வந்தன.

குழந்தை வெயில் தாங்க முடியாமல் வீறிட்டு அழுதது.அந்த பிச்சை எடுக்கும் பெண் சிக்னலில் குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாதை அப்பொழுது தான் கவனித்தான்.

சைக்கிளை அப்படியே விட்டு விட்டு சொக்கா சொக்கா என்று ஓடி போய் அவள் சிக்னலை கடந்து செல்லும் போது அவள் கையிலிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு சொக்கா சொக்கா என்று முத்த மழையால் அவன் கன்னங்களை நனைத்தான்.

அதை பார்த்ததும் அவள் திடுகிட்ட நின்றாள். அவன் குழந்தையை கொஞ்சி முடித்ததும் "அய்யா,என் குழந்தையை கொடுங்கோ நான் போகணும்" என்று கைகளை நீட்டினாள்.

அது அவன் குழந்தை இல்லை என்று உணர்ந்த அவன் ஏமாற்றத்துடன் குழந்தையை அவளிடம் திருப்பிக் கொடுத்து சோகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி சிணுங்கியது. சைக்கிளை ஓரமாய் நிறுத்தி எதிர் முனையில் கண்ணம்மா "என்னங்க, எங்கே இருக்கீங்க?நம்ம புள்ள கிடைச்சிட்டன். இதே ஆஸ்பத்ரில புள்ளை இறந்த ஒரு அம்மாக்கு நம்ம புள்ளைய வித்துட்டு போயிருக்கா அந்த பொம்பளை.நீங்க உடனே வாங்க" தொலைந்த சந்தோஷம் மீண்டும் கிடச்ச சந்தோசத்தில் உற்சாகமாக சொன்னாள்.

"அப்பனே சொக்கா, உனக்கு கோடி நன்றி என்புல்லையா திருப்பி கொடுத்திட்டே.அவனுக்கு சொக்கன்-னு உன் பேரையே வெக்கறேன்"என்று பூரித்துப் போய் ஆஸ்பத்திரியை நோக்கி சைக்கிளை மிதித்தான் மணி.


----------------------------------முற்றும்-----------------------

சனி, 5 ஏப்ரல், 2014

அழகான பரிசு

ஈஸ்டர் தினத்தில் தினத் தந்தி "குடும்பமலர்" வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி 






சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ 

"என்னங்க நீங்க அப்பா ஆகா போறீங்க " என்று சுமதி சொன்ன அடுத்த நொடி அவன் சந்தோஷத்தில் மிதந்தான்.

அவன் பெற்றோரின் இறப்புக்கு பின் சொந்தங்கள் எல்லாம் அன்னியமாகி போக இவன் அனாதையாகி  போனான். இருப்பினும் கவலை படாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து தன் படிப்பை தொடர்ந்தான்.

நல்ல கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து கம்புஸ் இண்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்தது.

இவனை விட்டு ஓடிய சொந்தங்கள் எல்லாம் நான் பெண் தரேன் நான் பெண் தரேன் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன அனால் அவனோ ஒரு அனாதை பெண்ணை மணந்தான்.

ஒட்டிக் கொள்ள வந்த சொந்தம் மீண்டும் விட்டுச் சென்றது.
எனவே அவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவன் மனைவி சுமதி மட்டும் தான்.அவள் தாயாக போகும் தருணத்தில் அவளை சந்தோசமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.அவன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவளை ஒரு சின்ன வேலை கூட செய்ய விடாமல் ஒரு தேவதையை போல் பார்த்துக் கொண்டான். ஆனாலும் அவள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம். அவள் தாயாக போகிறாள் என்கிற சந்தோஷம் அவள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிய வில்லை அதை உணர்ந்த அவன் என்னமோ ஏதோ என்று பதறிப்போய் "என்னம்மா? உடம்புக்கு முடியலையா?ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றான்.

ஒன்றுமில்லை என்று மழுப்பினாள்.

இந்த நேரத்தில் அம்மா இருந்தால் எவ்வளவு ஆதரவாக இருக்கும். தாயாக போற பெண்ணை ஒரு தாயை தவிர வேறு யாரு புரிஞ்சிக்க முடியும். வாயிக்கு ருசியா ஆசையா சமைச்சி வேண்டாம் என்றாலும் அன்பாய் ஊட்டிவிடும் அன்னைக்கு நிகர் வேறு யாரு. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இப்படி அனாதையா வாழ வேண்டி இருக்கு என்று தன்னை நொந்துக் கொண்டாள் .

"என்னடா உனக்கு அம்மா இல்லையேனு கவலை படுறியா? என்று எதேச்சையாக கேட்டான்.

உடனே அவள் கண்களில் அருவியாய் கொட்டியது கண்ணீர்.
"ஹேய், என்ன ஆச்சு மா?ஏன் அழறே?"என்று அவள் தோலை பற்றி அன்பாய் கேட்டான்.

அவள் மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள். பின் சுதாரித்துக் கொண்டு சொன்னால் "இந்த மாதிரி சமயத்தில் அம்மா இருந்த நல்ல இருக்கும்னு தோணுது."

அவள் வருத்தத்திற்கு காரணம் தெரிந்த சந்தோசத்தில் "அட பைத்தியமே இதுக்கா ஒரு வராம இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிகிட்டு இருக்கே?" என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் அவனையே பார்த்தாள்.

"நாளைக்கு உனக்கு பிறந்த நாள். சோ உனக்கு பிடிச்ச பிறந்த நாள் பரிசு தரேன்."
அவள் கண்ணகளை செல்லமாக கில்லி என்றான்.

மேலும் அவனே தொடர்ந்தான் "சாயங்காலம் சீக்கிரம் வரேன் ரெடியா இரு ஷாப்பிங் போகலாம்." என்று சொல்லிவிட்டு சென்றவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

அன்று மாலை  ஷாப்பிங்  முடித்து அப்படியே வெளியே ஹோட்டல்ல  சாப்பிட்டு வீட்டிற்கு வந்தனர்.

மறுநாள் காலையில் காபி கப்புடன் வந்து அவள் கணவன் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர்"என்று செல்லமாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை எழுப்பினான். 

"ம்ம்ம் தேங்கிஸ் "என்றாள் தூக்க கலக்கத்துடன். 

அவள் காபி குடித்ததும் "சரி வா உனக்கு ஒரு பரிசு வாங்கி வந்திருக்கேன். பிடிச்சிருக்கானு வந்து பார்த்து சொல்லு என்றான்.

என்ன என்பதை போல் இமைகளை உயர்த்தினாள்.

"வந்து பாரு" என்று அவள் கையை பிடித்துக் இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அங்கே பாதி நரைத்த  முடியுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு பெண் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள்.

அவள் தயக்கத்துடன் யாரு என்று அவர் அருகில் வந்து பார்த்தாள் 
.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி செல்லம்" என்று பரிசை கொடுத்தார்.

"அம்மா" என்று அவர்களை கட்டிக் கொண்ட சுமதி கண்களில் பெருகியது கண்ணீர் இப்பொழுது அந்த பெண்ணின் கண்களிலும் கண்ணீர். 

"ஏன் அழுறிங்க அம்மா" என்று பதறினாள்.

அனாதையை முதியோர் இல்லத்தில் வாடிக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு அன்பான மகளும் மருமகனும் கிடைச்சத நினைச்சி ஆனந்த கண்ணீர் என்றார்கள்..

தன் கணவனை பெருமையோடு பார்த்தாள் அவள்.... 

---------------------------------------------முற்றும் -------------------------------------------

புதன், 25 டிசம்பர், 2013

நேசம்

திரைகூத்து பத்திரிகையில் இம்மாத வெளியீடாக எனது சிறுகதை, "நேசம்" வெளியிட்ட திரைகூத்து இதழுக்கும் திரு.ரஹீம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...








                   
                      அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா  கடிகாரதையே  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக்  காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்காமல் அடம் பிடித்தது. சென்ற ஆண்டு அவனுடன் சேர்ந்து கொண்டாடிய அந்த பிறந்த நாள் நினைவுகள் மனக் கண்முன் வந்து வட்டமிட்டன.அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டே  எப்பொழுது தூங்கினாலோ அவளுக்கே நினைவில்லை.
கண் விழித்ததும் மீண்டும் அதே நினைவுகள் வந்து ஒட்டிக் கொண்டன. காலண்டரில்  தேதி  11-12-13 எனவும் கடிகாரத்தில் காலை 3.00 மணி எனவும்  காட்டியது. எத்தனை மகிழ்ச்சிகரமான நாள் இது. பாரதியார்  பிறந்த நாளில் தானும் பிறந்ததை எண்ணி எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.இப்படி ஒரு அழகான நாள் எத்தனை பேருக்கு பிறந்த நாளாக அமைய முடியும். இந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று சென்ற வருடத்திலிருந்து திட்டமிட்டிருந்தாள்.  ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை அந்த சந்தோஷமும்  அவள் முகத்தில் இல்லை. அவள் உயிருக்கு உயிராக நேசித்த அவனும் இன்று அவள் அருகில் இல்லை.அவன் எங்கு சென்றானோ?எப்பொழுது வருவானோ?யாருக்கும் தெரியாது. அவன் பிரிந்து சென்றதில் இருந்து அவள் இப்படி நடை பிணமாகி விட்டாள் அலைபேசி வாழ்த்துமொழி குறுஞ்செய்திகளால்  நிரம்பி வழிந்திருந்தது. அவனை தினமும் தேடி அலைவதே அவளது வேலையாக இருந்தது.

கண்களை கசக்கி  வெளியில் வந்து பார்த்தால் வாசல்கள் எல்லாம் குளித்து விட்டு வண்ண வண்ண பூ கோலம் அணிய தயாராகிக் கொண்டிருந்தன. இவளும் குளித்து "இறைவா எங்கிருந்தாலும் என் ரவி இன்று என்னை பார்க்க வரணும்" என்று வேண்டிக் கொண்டு  அந்த மார்கழி பனியில் தனது ஸ்கூட்டியை கிக்கினாள். தெருவெல்லாம் வண்ண கோலங்கள் கம்பளம் விரித்து வாழ்த்து சொல்லி வரவேற்றன.

அவள் எங்கு செல்கிறோம்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாமல் அவன் நினைவுகளை சுமந்தபடி காற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்தாள்.எதிரில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் ஒருகணம் நிலைகுலைந்து நடுரோட்டில் விழுந்தாள்.

"அம்மா "  என்று அலறி சுதாரித்துக் கொண்டு  எழுந்திரிக்க முயலுகயில் அவன் கை கொடுத்து தூக்கி விட்டான்.  தூசி  தட்டிக் கொண்டே தூக்கி விட்ட அவனை நன்றியுடன் பார்த்த அவள் பேச முடியாமல் ஊமையாகி நின்றாள்.அவள் கண்களை அவளாலையே  நம்ப முடிய வில்லை.இது நிஜம் தானா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அவளை தன்னருகில் இழுத்து அவள் காதுக்குள் ஹப்பி பர்த்டே ஹனி " என்று கிசுகிசுத்தான்.

பூரித்து போய் அவன் மார்புக்குள் முகம் புதைத்து  அவனை இறுக அனைத்துக் கொண்டாள்,விட்டு விட்டால் மீண்டும் எங்கே காணாமல் போய் விடுவனோ என்கிற பயம் அவளுக்கு. அந்த அரவணைப்பு அவளுக்கு எல்லையில்லா சந்தோசத்தை கொடுத்தது. அவள் கூந்தலை இதமாக வருடிய படி அவளை அருகில் இருந்த பார்க்கிற்கு அழைத்து சென்று அங்கிருந்த ஒரு  பெஞ்சில்  அமர்ந்தார்கள்.

 "ரவி"  என்று அவள் ஏதோ சொல்ல முயல  அதற்குள்  "ஷ்ஷ்ஷ்" என்று அவள் உதடுகளில் விரல் வைத்து  எதுவும் பேச வேண்டாம்  என்றான். அவள் பூ போன்ற முகத்தை தன் கைகளுக்குள் அள்ளி சிவந்திருந்த அவள் உதடுகளை தன் உதடுகளால் ஒற்றினான்.விழிகளை மூடி அந்த முத்தத்தை முழுமையாக ரசித்தாள். அவன் பிரிவின் தாக்கம் சோர்ந்து போன அவள் உடலில் தெரிந்தது. தூக்கமற்ற வறண்ட அவள் கண்கள்  அவளுக்கு அவன் மேல் இருந்த காதலை சொல்லியது.  கடந்த வருடம் இதே நாளில் அவளை விட்டு காணாமல் போன அவன் இன்று இப்படி திரும்பி வருவான் என்று அவளுக்கு தெரியாது. எது எப்படியோ அவனது அருகாமை அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

அந்த பனி மூடிய காலை பொழுதில் சூரியனும் மேக போர்வையிலிருந்து வெளிவர தயங்கும் நேரத்தில் அவனும் அவளும் மட்டும் இப்படி அன்பில் உறைந்து கிடப்பது சுகமாக இருந்தது.

மரத்தில் இரண்டு காகங்கள் அவர்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் காதல் செய்துக் கொண்டிருந்தன. அவற்றை பார்த்து அவன் புன்னகைக்க அவள் வெட்கத்தில் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் .அவன் அவளை அணைத்துக் கொண்டு " நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் " என்றான். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

" உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்றாள். அவள் கண்களில் துளிர் விட்ட கண்ணீரை அவன் விரல்களால் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு .

 "இது நீ சந்தோசமாக இருக்க வேண்டிய நாள்.இப்படி அழலாமா?' என்றான்.

"அப்போ நீ செய்தது மட்டும்  சரியா?" எதிர் கேள்வி கேட்டாள்.

"இனி அப்படி செய்ய மாட்டேன்" என்றான்

"இனி எப்பவும் என் கூடவே இருப்பியா ?" குழந்தைத்தனமாக கேட்டாள்.

"ம்ம்ம்" என்று தலையசைத்தான்.

"நீ இப்படி சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு பிரிந்து  செல்வாய் என்று நான் நினைக்கவே இல்லை.எதற்கு இப்படி செய்தாய் ரவி"

" என்னை மன்னித்துவிடு பிரியா எல்லாம் எதிர்பாராமல் நடந்து விட்டது" என்றான்

எது எப்படியோ அவனின் வருகை சொல்லமுடியாத மகிழ்ச்சியை தந்தது அவளுக்கு.அவள் கண்களை மூடி நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தாள்.அவனை முதல் முதலாக பார்த்தது, அவன் தன் காதலை சொன்ன விதம், அவள் பெற்றோரிடம் அவர்கள் காதலை சொன்ன விதம், திடிரென்று ஒரு நாள் காணாமல் போனது, இப்பொழுது இப்படி மீண்டும் இணைந்தது என  எல்லாநிகழ்ச்சிகளும் ஒன்றின் பின் ஒன்றாக அவள் கண் முன் நிழலாடின. மீண்டும் கண்ணீர் உற்றென பெருகி ஆறாக அவள் கன்னங்களில் பாய்ந்து ஓடியது.

அவள் கண்களை இதமாக துடைத்த " ஐ லவ் யூ ஹனி " என்று அவள் கண்களை .ஆழமாக பார்த்தான்.

" ஐ லவ் யூ டூ " என்று குதூகலமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தான் அணிந்திருந்த சொட்டரை கழற்றி அவளுக்கு போர்த்தி விட்டான்.
அவனது இந்த அரவணைப்புக்காக தானே அவள் இத்தனை  நாள் ஏங்கி கிடந்தாள்.இந்த காதல்  நிறைந்த அன்பிலும் அரவணைப்பிலும் ஆயுள் முழுக்க அடைந்து கிடக்க தானே  விரும்பினாள்.

நீண்ட நேரம் அவர்கள் இருவரும் அங்கேயே ஒருவர் மடியில் மற்றொருவர் சாய்ந்து அன்பில் திளைத்தார்கள்.இந்த குறுகிய கால பிரிவு அவர்கள் காதலை மேலும் பலப்படுத்தியது.ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

"சரி வா வீட்டுக்கு போகலாம். உன்னை பார்த்தால் அம்மா அப்பா இரண்டு பெரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க " என்றாள்.

அவன் எழுந்து அவளுடன் கைகோர்த்து நடந்தான் அவன் தோளில் சாய்ந்து சாலையோர பூக்களை தன் மறுகையால் வருடியபடி நடந்தாள் அவள். அந்த பூக்களில் இருந்த பனித்துளிகளை இலைகளை அசைத்து அவன் மீது விழ செய்தாள். அவளது இந்த விளையாட்டுதனத்தை ரசித்தபடி நடந்தான். அவளிடம் ஓர் ஆண்டு காலமாக காணாமல் போயிருந்த புன்னகை,மகிழ்ச்சி எல்லாமே அவன் வருகையால் திரும்பி வந்து ஒட்டிக் கொண்டது .

சற்று தூரம் நடந்ததும் கூட்டமாக  மக்கள் இருந்ததை பார்த்து " ஏய், அது என் வண்டி " என்று கத்தி கூட்டத்தை விலக்கி நின்றிருந்த காவலர்களை தண்டி அந்த வண்டியின் அருகே ஓடினாள்.அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

அங்கே இறந்து கிடந்த அவள் சடலத்தை கண்டதும் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள்.

"ர ....ர....வி.... அது....அது....." அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோளை இறுக பற்றிக் கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் கையை நீட்டி காட்டினாள்.

இறந்து கிடந்த அவள் தேகத்தை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் காலையில் வண்டியில் வரும்போது அவளுக்கு நேர்ந்த விபத்து நினைவிற்கு வந்தது. அந்த விபத்தில் தான் ரவியை சந்தித்தாள். அப்படியென்றால் நீயுமா??? என்பதுபோல் கண்களில் நீர் ததும்ப அவனை பார்த்தாள்.

"ஆம். உன்னை பார்க்க வந்த அந்த இரவு ஒரு லாரி மோதி என் உயிரும் உடலும் உன்னை விட்டு பிரிந்தது" கண்களில் கண்ணீர் வழிய சொன்னான்.

"இனி நம்மை யாரும் பிரிக்கவே  முடியாது ரவி" என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.அவளின் அந்த நேசமே அவனுடன் அவளை சேர்த்தது. அவன் அருகில் இருப்பதால் மரணத்தை கூட ரசித்தாள்.

                                   ----------------------முற்றும் -----------------------

வெள்ளி, 21 ஜூன், 2013

அழகு குறிப்புகள்

இன்று பீஸ் வாய்ஸ் பத்திரிகையில் எனது அழகு குறிப்புகளை வெளியிட்ட திரு.ரஹீம் அவர்களுக்கும் பீஸ் வாய்ஸ் இதழுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...



புதன், 8 மே, 2013

ஜாதகம்


சென்ற மாத "மகாகவி"  மாத இதழில் வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி.




சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ 


ஜிகு ஜிகு என்று கண்ணை பறிக்கும் வண்ணத்தில் சிலுக்கு சட்டை அணிந்து வந்த ரமேஷை பார்த்து "என்னடா மச்சான்,இன்னைக்கு பச்சை கலரு சிங்குசானு  சட்டை போட்டு வந்திருக்கே?"என்று கிண்டலடித்தான் சுனில்.

" என் ராசிக்கு இன்னைக்கு பச்சை கலர் சட்டை போட்டா நல்லதுன்னு காலைல ராசி பலன் நிகழ்ச்சியில பார்த்தேன் அதான் மச்சான் "என்று பதிலளித்தான்.

'ஏன்டா ,ஏற்கனவே கலர் கலரா கல்ல பொருக்கி கைல மோதிரமா மாட்டியிருக்கே.அது போதாதுன்னு இப்போ இது வேறயா? இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாம் வெறும் ஹம்பக்.இதை எல்லாம் நம்பினா ஏமாற்றம் தான் மிஞ்சும்.இத நீ எப்போ தான் புரிஞ்சுக்க போறியோ "என்று அங்கலாய்த்தான்.

மறுநாள் ஆபீசுக்கு சோர்வாக வந்த ரமேஷை பார்த்த சுனில்

" என்ன மச்சான், இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கே ஏதாவது பிரச்சனையா  ?" என்று அக்கறையோடு விசாரித்தான்.

" இன்னைக்கு காலையில எனக்கு பெண் குழந்தை பிறந்திரிச்சுனு ஊரிலிருந்து போன் பண்ணங்க" உற்சாகமற்ற குரலில் பதிலளித்தான்.

"  அட வாழ்த்துக்கள் மச்சான். இவ்வளவு சந்தோஷமான விஷயத்த இப்படி சோகமாவா சொல்றது. சரி ட்ரீட் எங்கே? உற்சாகமாக கேட்டான்.

"அட நீ வேற சும்மா இருப்பா.நானே நொந்து போயிருக்கேன்" என்று சலித்துக் கொண்டான்"

"என்னடா ஆச்சு? தாயும் குழந்தையும் நலம் தானே?" என்றான்.

"ஹ்ம்ம்"என்று தலையாட்டினான்.

"அப்போ ஏண்டா இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்கே?

"ஜாதகப்படி எனக்கு முதல் குழந்தை ஆண் தான் பிறக்கும்னு ரொம்ப நம்பிக்கையோட வீட்ல எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம்.ஆனால் இப்படி ஆயிடுச்சு " என்று ஏமாற்றம் கலந்த குரலில் சொன்னான்.

"அடச்சா...நான் என்னமோ ஏதோனு பயந்து போயிட்டேன். இதுக்கு தானா மூஞ்சிய இப்படி டல்லா வெச்சிருக்கே? அதான் ஜாதகம் பொய்யுனு தெரிஞ்சுகிட்ட இல்ல விடுடா.பிறந்தது எந்த குழந்தையா இருந்தா என்ன?இந்த குழந்தையோட பிறப்பால உனக்கு அப்பா என்கிற அந்தஸ்து கிடைத்திருக்கு.அந்த சந்தோசத்த கொண்டாடாம இப்படி ஜாதகம் ஜோசியம்னு புலம்புறியே"என்று கடிந்து கொண்டான்.

"அட ஆமாம் இல்ல,நான் அப்பா ஆகிட்டேன்  இல்ல.தேங்க்ஸ்டா  மச்சான். நான் இப்பவே ஊருக்கு கிளம்புறேன்.குழந்தை பிறந்த நேரம் எப்படி இருக்குனு ஜாதகம் எழுத சொல்லணும்.சார் வந்தா இந்த விஷயத்தை சொல்லி எனக்கு இரண்டு நாள் லீவு சொல்லிடு.நான் ஊர்லிருந்து வந்த பிறகு உனக்கு ட்ரீட் தறேன்"என்று கூறி புறப்பட்டவனை வியப்புடன் பார்த்தபடி இருந்தான் சுனில்...

                                                      ----- முற்றும் -----


செவ்வாய், 31 ஜூலை, 2012

அந்த இரவு...

திரைகூத்து பத்திரிகையில் எனது சிறுகதை, வெளியிட்ட திரைகூத்து இதழுக்கும் திரு.ரஹீம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...



சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.
கோ 




தோட்டத்தில் உலவி கொண்டு இருந்த கவிதா ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.யாரும் தென்பட வில்லை,என்னவே சலசலப்பு வந்த திசையை நோக்கி மெதுவாக நடந்தாள்.யாரும் தென்பட வில்லை.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே தென்பட வில்லை.

"யாரூ?" குரல் கொடுத்தாள்.பதில் வர வில்லை.

யாரோ தன்னை நோக்கி வருவது போல் தோன்றியது,ஆனால் அப்படி யாரும் வர இல்லை.அங்கும் இங்கும் சுற்றி பார்த்தாள். இதற்கு மேலும் அங்கு இருப்பது நல்லதில்லை என்று உணர்ந்து, வேகமாக நடந்தாள்.யாரோ பின் தொடர்வதை போல் உணர்ந்தாள்.ஒரு நொடி நின்று பின்னால் திரும்பி பார்த்தாள்.யாரும் இல்லை.

"யாராவது இருக்கீங்களா ?"பதில் இல்லை.இது தனது பிரமை என்று நினைத்துக் கொண்டு மீண்டும் நடக்க தொடங்கினாள்.மீண்டும் அதே காலடி ஓசை.நிச்சயமாக,யாரோ பின் தொடர்கிறார்கள் என் நினைத்து வேகமாக ஓடினாள்.

உச்சி வெயிலில் கல்லிலும் முள்ளிலும் ஓடி ஓடி களைத்து போய் மயங்கி விழுந்தாள்.மயக்கம் தெளிந்து பார்க்கையில் தான் ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"நான் இங்கு எப்படி வந்தேன்?"யோசித்து பார்த்தாள் ஆனால் ஏதும் நினைவிற்கு வர வில்லை.நிலவின் ஒளி தவிர வேறு எந்த வெளிச்சமும் தெரிய வில்லை.

"ஹலோ,யாராவது இருக்கீங்களா?"குரல் கொடுத்து பார்த்தாள்.ஆனால் எந்த பயனும் இல்லை.பதில் ஏதும் இல்லை.திடீர் என்று சில்லேன்று காற்று விசியதும் மரங்கள் எல்லாம் வேகமாக அசைந்ததில்,ஏற்பட்ட சத்தத்தை கேட்டு  ஒரு நிமிடம் பயத்தில் உறைந்து போனாள்.

எப்படியாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து, எழுந்து நடக்க தொடங்கினாள். ஆந்தைகளின் அகவல்களும்,நரிகளின் ஊளைகளும் அவளை குலை நடுங்க செய்தன.எப்பொழுதும் வீட்டை விட்டு, தனியே வெளியே வராதவள் இன்று இப்படி யாரும் இல்லாத  கட்டுக்குள்  சிக்கி தவிக்கிறாள்.அந்த காட்டில் மரங்களின் நிழல்கள் கூட அவளை அச்சுறுத்தின.

காட்டுக்குள் தனியாக பயந்து பயந்து நடந்து சோர்ந்து போனாள்.ஆள் நடமாட்டமே இல்லாத இந்த காட்டுக்குள் நம்மை யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று எங்கியவள்,இனி யாரும் வந்து காப்பாற்ற போவதில்லை என்று நினைக்கையில் அவளுக்கு அழுகை வந்தது.இன்று கிலசரின் இல்லாமலே கண்ணீர் வழிந்து அவள் கன்னங்களை ஈரப்படுத்தியது. தூரத்தில் ஏதோ ஒரு வெள்ளிச்சம் தென்பட்டது.

பயத்தில் உறைந்து,சோர்ந்து போயிருந்த அவளுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சமாக அது தோன்றியது. வெளிச்சம் வந்த திசையை நோக்கி ஓடினாள்.ஒரு மூதாட்டி நெருப்பு மூட்டி குளிர்  காய்ந்து கொண்டிருந்தாள்.அவர்களை பார்த்ததும் நிம்மதி பேருமுச்சி விட்டபடி அவர் அருகில் சென்று உட்கருந்து கொண்டாள்.

"இந்த நெருப்பு குளிருக்கு இதமா இருக்கு இல்ல ?" என்று மூதாட்டியை பார்த்தாள்.
அதை ஆமோதிப்பது போல் தலையாசைத்தாள் அந்த மூதாட்டி.

"இந்த நேரத்தில் நீங்க இங்கே என்ன பண்றீங்க?" என்று பேச்சை தொடங்கினாள்  கவிதா.

"அது ஒரு பெரிய கதை" என்று பேரு முச்சு விட்டாள் மூதாட்டி.

"என் கணவர் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இறந்து விட்டார்.எனக்கு இரண்டு மகன்கள்.நன்றாக அவர்களை வளர்த்து படிக்க வைத்து.அரசாங்க வேலையும் வாங்கி கொடுத்து.நல்ல முறையில் கல்யாணமும் செய்து வைத்தேன்.திருமணதிற்கு பிறகு மனைவி இனித்தாள்,தாய் கசந்தேன்.என் சொத்தை எழுதி வாங்கி கொண்டு என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட திட்டம் போட்டார்கள் அதற்காக என் மருமகள்கள் என்னை சித்தரவதை செய்தார்கள் அதை எல்லாம் தாங்க முடியாமல் நான்.என் சொத்தை அநாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு இங்கு வந்து சேர்த்தேன்" என்றாள்

கவிதாவிற்கு ஒரு கணம் இதயம் நின்று விட்டு துடித்தது.அந்த மார்கழி பனியிலும் வியர்த்து கொட்டியது.சுதாரித்து கொண்டு அந்த மூதாட்டியை பார்த்து கேட்டாள்.

"அப்புறம் எப்படி பிழைத்தீர்கள்?"

"ஹா ஹா ஹா... பிழைத்திருந்தா சுடுகாட்டுல எதுக்கு இருக்க போறேன்?நான் செத்து நாலு வருஷம் ஆகுது" சிரித்தபடியே விடையளித்தாள் மூதாட்டி.

கவிதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.இவ்வளவு நேரம் தான் பேசிக் கொண்டிருந்தது ஒரு ஆண்மாவிடம் என்ற நினைப்பே அவளுக்குள் ஒருவித அச்சம் கலந்த நடுக்கத்தை ஏற்படுத்தியது. 

அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீள்வதற்கு முன்பே அந்த மூதாட்டி தொடருந்தாள்.

"ஏதோ என் கஷ்டகாலம் நான் இப்படி செய்து விட்டேன்.ஆனால் நீ எதற்கு தற்கொலை செய்து கொண்டாய்?காதல் தோல்வியா என்ன?"

அந்த கேள்வி அவளை ஒரு கணம் உலுக்கி விட்டது. அவள் முற்றிலும் நிலை குலைந்து போனாள்.

"என்ன உலறுகிறிர்கள் நீங்கள்?நான் வளர்ந்து வரும் இளம் நடிகை.இன்னும் ஒரு வாரத்தில் என்னக்கும் பிரபல தொழிலதிபர் மகன் கார்த்திக்கிற்கும்  திருமணம்.அப்படி இருக்கும் போது நான் எதற்கு முட்டாள் தனமா தற்கொலை எல்லாம் செய்து கொள்ள போகிறேன்???"

"அதெல்லாம், எனக்கு எப்படிம்மா தெரியும்?உன்னை புதைக்க வந்த போது உன் பெற்றோர் கதறி அழுதபொழுது காதில் விழுந்ததை தான் உன்னிடம் கேட்டேன்" என்று பதிலளித்தாள்.

"சரி வந்து படு....பொழுது விடிய போகுது"என்று கூறி தன் கல்லறைக்குள் சுருண்டு கொண்டாள் மூதாட்டி.

"ஆனால் நான் இப்போது தானே காட்டில் இருந்து ஓடி வந்தேன்?" என்ற கேள்வியுடன் மூதாட்டியை குழப்பத்துடன் நோக்கினாள்.

"காட்டிலும் மேட்டிலும் அலைவது தானே நம்போன்ற ஆன்மாக்களின் வேலை.போக போக உனக்கும் பழகி விடும்"

அப்பொழுது தான்,அவள் நினைவிற்கு வந்தது.தன் காதலன் கார்த்திக்குடன் அவன் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துத் தூங்கியது.பிறகு எப்படி  தான் தற்கொலை செய்திருக்க முடியும்?புரியாமல் தவித்தாள்


-------------------- முற்றும் -----------------------------