வெள்ளி, 31 மார்ச், 2023

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய மக்கள் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் கார்டை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வரி செலுத்துபவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதாவது இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் கட்டாயம் இணைத்து விட வேண்டும்.

வருமான வரி சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும் பான் எண் அளிக்கப்பட வேண்டும் என்ற விதியின் படி 2017 ஆம் ஆண்டில் பான் எண் வழங்கும் பணி தொடங்கி இந்தியர் அனைவருக்கும் பான் கார்டு வழங்கப்பட்டது.

அவ்வாறு பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவினை பயன்படுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயலற்றதாக மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு பான் எண் செயலற்றதாக மாற்றப்படும் ஆனால் வருமான வரி செலுத்தி டிடிஎஸ் பெறுவருக்கு அந்தத் தொகை திருப்பி செலுத்தப்பட மாட்டாது.

பான் எண் செயல்படும் விதத்தில் மாற்றப்படும் வரையில் டி டி எஸ் TDS -ற்கான  வட்டிதொகை வழங்கபட மாட்டாது. அதே சமயம் வருமான வரி விதிகளின் படி, டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த 30 நாட்களுக்குப் பிறகு பான் கார்டு மீண்டும் செயல்பட தொடங்கும்.

வியாழன், 30 மார்ச், 2023

செம்பருத்தி பூ டீ

ஹலோ பிரண்ட்ஸ் குட் மார்னிங் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க....




இன்னைக்கு எங்கள் வீட்டில் கொத்து கொத்தாக செக்கச் சிவந்த நிறத்தில் செம்பருத்தி பூக்கள் பூத்திருக்கின்றன. பொதுவா செடி வைத்திருக்கிறோம் என்றால் பெரிய வீடு இருக்கிறதோ அல்லது பெரிய தோட்டம் இருக்கிறதோ என்று நினைக்க வேண்டாம் ஏனென்றால், செடி வளர்க்க பெரிய வீடோ அல்லது பெரிய தோட்டமா தேவையில்லை.

செடி வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதும். நான் வளர்க்கும் செடி எல்லாமே சிறிய தொட்டியில் வீட்டில் வளர்க்கின்றேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா அப்படித்தான் இந்த செடி வளர்க்கும் ஆசை இருப்பதால் சிறு வயது முதல் இப்படி தொட்டிகளில் செடி வளர்ப்பேன். வீட்டில் பெரியவர்கள் கொடுக்கும் காசை சேர்த்து வைத்து சின்னஞ்சிறு தொட்டிகளை வாங்கி செடிகளை வளர்ப்பேன்.

ஒவ்வொரு செடியும் பூக்கும் பொழுது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு செடியில் முதன் முதலாக வரும் இலை கூட மனதிற்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது. அதனுடன் பேசும்பொழுது பேசும் பொழுதும் வருடும் பொழுதும் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

வழக்கமாக பூக்கும் செம்பருத்தி பூக்களை சாமிக்கு வைத்து விடுவேன். ஆனால் இன்றைக்கு செம்பருத்திப் பூவில் டீ போடலாம் என்று நினைக்கின்றேன்.

சரி வாங்க இன்னைக்கு நம்ம செம்பருத்தி டீ போட்டு குடிக்கலாம். என்ன நீங்க ரெடியா???  

செம்பருத்தி பூ டீ-க்கு தேவையான பொருட்கள் :

செம்பருத்தி பூக்கள் - 5/6
தேன் அல்லது சர்க்கரை - 1 ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1

செம்பருத்தி டீ செய்முறை :

ஒரு கப் தண்ணீரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
செம்பருத்தி பூக்களை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும்.  இவை வீட்டில் பூத்த பூக்கள் என்பதால் நான் வெறும் தண்ணீரில் லேசாக அலசி கொள்கிறேன். ஒருவேளை நீங்கள் கடையில் வாங்குவீர்களனால் பூக்களை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதில் உள்ள பூச்சிக்கொல்லிகள் அகலும் வரை நன்றாக அலசிக் கொள்ளுங்கள்.

பின்னர் பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கொதிக்கும் நீரில் செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் போடுங்கள். இப்பொழுது நீரின் நிறம் மாறுவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.  தேநீரின் நிறம் இளஞ் சிவப்பு நிறமாக மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். 

பூக்களின் நிறம் தண்ணீரில் முழுவதுமாக வடிந்து இளஞ் சிவப்பு நிறத்தில் தண்ணீர் காட்சியளிக்கும். 

பின்னர் டீயை வடிகட்டிக் கொள்ளுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்த்த உடன் இளஞ் சிவப்பு நிற டீ, ரத்த சிவப்பாக மாறிவிடும். அதில் தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை கலக்கவும்.  நம்முடைய செம்பருத்திப்பூ டீ தயாராகிவிட்டது.
 
வட்டமாக வெட்டி வைத்த எலுமிச்சை  துண்டுகளால் அலங்கரித்து பரிமாறலாம்.

நம்மளுடைய இந்த டீ கோடையில் உடலுக்கு உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது இதைக் குடிப்பதால் இதய நோய் உள்ளவர்களுக்கு இதயம் வலுவடைகிறது 



செம்பருத்தி டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. 
  • செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. 
  • செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது. சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும்  வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம். தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது. 
  • இது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

செம்பருத்திப் பூவின் சிறப்புகள் :

  • ஹைபிஸ்கஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்டது  இந்த செம்பருத்திப் பூ.
  • மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி 
  • இதற்கு சீன ரோஜா என்ற மற்றொரு பெயரும் உண்டு. 
  • செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற சித்தர்கள் அழைத்து வந்தனர். 

பின் குறிப்பு:

சைனஸ் பிரச்சினை மற்றும் மூச்சுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்கவும் ஏனென்றால் இது அதிகமான குளிர்ச்சியை ஏற்படுத்தும் எனவே அவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக  இருந்தது என்றால் மறக்காமல் கமெண்ட் செய்யவும் மீண்டும் ஒரு புதிய பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி...





பிசினஸ் தந்திரம் - குட்டி கதை IV

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு  மகானிடம் சென்று கேட்டான்:


"நான் திராட்சை சாப்பிடலாமா?''


மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''


"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''


"ஓ.. பயன்படுத்தலாமே?''


"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்


வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''


"அதிலென்ன சந்தேகம்?''


"அப்படீன்னா இதுவெல்லாம்  சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே?''


மகான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்:


"இங்க பாருப்பா... உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா உனக்குக் காயம் ஏற்படுமா?''


"அதெப்படி ஏற்படும்?''


"தண்ணீர் ஊற்றினால்?''


"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்?''


"மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்

போட்டால்?''


"காயம் ஏற்படும்''


"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்'' என்றார் மகான்..


புதன், 29 மார்ச், 2023

பிசினஸ் தந்திரம் - குட்டி கதை III

ரவி, ஹரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாக கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் ரவி. 

அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை ரவியிடம் கேட்பார். ரவி கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.

 ஹரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். ரவி உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹரி பதிலுக்கு கத்துவார். ரவி கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!

நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. 

அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!



படித்ததில் ரசித்தது.........

செவ்வாய், 28 மார்ச், 2023

பிசினஸ் தந்திரம் - குட்டி கதை II

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.

எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.

சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார்.

பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.

 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.

 அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.

அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.





படித்ததில் ரசித்தது.........

கார் இருக்கா??? அப்போ இது தெரியுமா உங்களுக்கு???

இன்னைக்கு தெரிஞ்சுக்கலாம் வாங்க பகுதியில நாம தெரிஞ்சுக்க போற விஷயம் நோ கிளைம் போனஸ் (No claim bonus). இத பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை ஏனென்றால்,  இது பற்றி எந்த காப்பீட்டு நிறுவனமும் சொல்லுவதும் இல்லை எந்த ஏஜெண்டும் நமக்கு தெரிவிப்பதும் இல்லை.


கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும்  வாங்கப்படாமல்  இருக்கும் பட்சத்தில்  No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.

அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம்  No Claim Bonus Certificate வேண்டும் என்று   எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள் . 

அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை . 

மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும் . 

எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும்.

No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்தாரே அந்தக் காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம்  .

அந்த No claim bonus-ஐ புதிய வாகனம் எடுக்கும் போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .  

இனிமே இந்த No claim bonus -ஐ தவறாம பயன்படுத்திக் கொள்ளுங்கள் .....

திங்கள், 27 மார்ச், 2023

பிசினஸ் தந்திரம் - I

 

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.

கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள்  

அனைத்தும் கீழே விழுந்து  உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.

பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?


ஏதோ என்னால் முடிந்த உதவி என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு " தம்பி ...இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.

உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.

 மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

உடைந்த முட்டைகளின் விலையை விட அதிக பணம் கிடைத்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார். 

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"



படித்ததில் ரசித்தது....

விடை தெரியுமா உங்களுக்கு???

ஹலோ பிரண்ட்ஸ் குட் மார்னிங்...

இன்னைக்கு தெரிஞ்சுக்கலாம் வாங்க பக்கத்துல, நாம பாக்க போறது ஒரு மூளைக்கு விளையாட்டு....
மூளைக்கும் விளையாட்டா ???அது என்ன??? அப்படின்னு தானே யோசிக்கிறீங்க ???அது ஒன்னும் இல்லைங்க....
நம்ம முன்னோர்கள் நமது மூளை வளர்ச்சிக்கும் அறிவுத்திறன் மேம்பாட்டுக்கும் பயன்படுத்திய ஒரு வகை விளையாட்டு தான்  இன்னைக்கு நம்ம பாக்க போறோம் அது என்னன்னா விடுகதை.
பொதுவா நம்ம எல்லோருக்கும் விடுகதை பிடிக்கும் அல்லவா இன்றைக்கு நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல போறேன் அந்த விடுகதையை படிச்சிட்டு பதில் தெரிஞ்சவங்க  கமெண்ட்ல  சொல்லுங்க. தெரியாதவங்களுக்கு அடுத்த திங்கட்கிழமை தெரிஞ்சிக்கலாம் வாங்க பக்கத்துல நானே சொல்றேன் இப்ப வாங்க அது என்ன விடுகதை என்று பார்க்கலாம்...

ஒரு மாமனார் தனது மருமகனை விருந்துக்கு வீட்டுக்கு வர சொல்லி அழைத்தாராம்  ஆனால் மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு ஒன்றாம் தேதியிலிருந்து 31-ஆம் தேதிக்குள் என்றைக்கு வேண்டுமானாலும் வருவேன். நான் வர தேதி எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு (கிராம்) தங்க காசு தரணும் என்று ஒரு கண்டிஷன் போட்டாராம். அதற்கு மாமனாரும் சரின்னு சொல்லிட்டு தங்க நகை  செய்யும் ஆச்சாரியிடம் மாப்பிள்ளை என்றைக்கு வந்தாலும் கொடுக்கிற மாதிரி 31  தங்க  காசு செய்த தர சொன்னாராம், ஆனால் புத்திசாலி ஆச்சாரியோ மாப்பிள்ளை என்றைக்கு  வந்தாலும் கொடுக்கிற மாதிரி.அஞ்சே அஞ்சு  தங்க  காயிண்ஸ் செய்து கொடுத்தாராம்.அந்த அஞ்சு காயின்ஸ்  வெயிட் என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்.....  

என்ன நண்பர்களே விடுகதை பிடிச்சிருக்கா ? சுவாரசியமா இருக்கா? இல்ல கொஞ்சம் குழப்பமா இருக்கா? இது எதுவுமே இல்லன்னா ரொம்ப எளிமையா இருக்கா ??? விடுகதை எப்படி இருந்துச்சுன்னு சொல்லிட்டு கீழ பதில் சொல்லுங்க ஐ அம் வெயிட்டிங் மீண்டும் சந்திப்போம் அதுவரை தமிழ் போல் வளர்வோம்


வெள்ளி, 24 மார்ச், 2023

SBI- யின் முதலீட்டு திட்டம்

அனைவருக்குமே தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை ஏதாவது திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்க விரும்புகிறார்கள். ஆனால் எந்த வகையான திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம். 

கவலை இல்லை ...இதோ வந்துவிட்டது.... 

SBI வங்கியின் Amrit Kalash Fixed Deposit Scheme  முதலீட்டு திட்டம்.... 

இத்திட்டத்தில் மார்ச் 31-க்குள் குறைந்த பட்சமாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்து பயன் பெறலாம்.

அதாவது இந்த திட்டத்தில்  நீங்கள் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 7.10% வட்டியும் அதுவே நீங்கள்  60 வயதிற்கு மேற்பட்டவராக  இருப்பின் (அதாவது Senior Citizen)  7.60% வட்டியும்  வழங்கப்படுகின்றது.  இதன் கால அளவு 400 நாட்கள் மட்டும் தான். 400 நாட்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற அளவில் வட்டி மற்றும் முதிர்வு தொகையினை பெற்று கொள்ளலாம்.  


வியாழன், 23 மார்ச், 2023

இளஞ்சிவப்பு மழை லில்லி

மழை அல்லி அப்படியென்றால் அது மழைக்காலத்தில் அல்லது குளிர்காலத்தில் பூக்குமா? இல்லை...

பிறகு ஏன் அவை மழை அல்லிகள் என்று அழைக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? 

ஏனெனில் அவை பருவகால கனமழை அல்லது புயல்களுக்குப் பிறகுதான் குறுகிய கால பூக்களை உற்பத்தி செய்கின்றன. 

ஆம் என் அழகான சிறிய தோட்டத்தில், மழையின்றி  மலர்ந்தது மழை லில்லி. அதன் பெயர் மழை லில்லி என்றாலும், அது எப்போதும் கோடையில் தான் பூக்கத் தொடங்குகிறது.



இது ஒரு வகையான கிழங்கு (bulb) வகை தாவரமாகும். ஆண்டு முழுவதும் புல் போல் தெரிகிறது. கோடையில் அழகான இளஞ்சிவப்பு நிற பூக்களை அளிக்கிறது. இது மிக எளிதாக வளரும் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லை. அழகான பூக்களை தரும் இந்த செடியை தொட்டியில் கூட வளர்க்கலாம். 


ஒவ்வொரு ஆண்டும் இந்த அழகுகளைப் பார்க்க கோடைகாலத்திற்காக காத்திருக்கிறேன். வருடத்திற்கு ஒருமுறை பூத்தாலும், அந்த பூக்களின் நினைவுகளும் அதன் துடிப்பான நிறமும் அடுத்த பூக்கும் வரை நம் மனதில் நிலைத்திருக்கும்.

பூவின் அழகான இளஞ்சிவப்பு நிறம் என் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க மறக்காது. இந்த பூக்கள் பூக்கும் போதெல்லாம் அது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.


மலர்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்து மனதை அமைதிப்படுத்துகின்றன.
அதனால் தான் நான் தினமும் காலையில் எனது சிறிய (மினி) மாடி தோட்டத்தில் உலா வருவேன்.




அவை  பூக்கும் போதெல்லாம் என் கேமராவில் படம் பிடித்து இந்த அழகிகளின் நினைவுகளை என்றென்றும் ரசித்து பார்க்க விரும்புகிறேன். நான் இந்த  இளஞ்சிவப்பு அழகியைப்  ரசிக்கிறேன்..... அப்போ  நீங்கள்....?



 

ஞாயிறு, 19 மார்ச், 2023

திருமண நாள்

 



அனைவருக்கும் வணக்கம்....

எனது மகிழ்ச்சியான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வருடம் எனது ஐந்தாவது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாட விரும்பினேன். ஆனால் வழக்கம்போல் சோதப்பிவிட்டது. இருப்பினும் மிக எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம். 

திருமண நாளன்று எனது சகோதரன் கேக் வாங்கி வந்தான். சகோதரனின் மனைவி அறுசுவை விருந்து சமைத்து கொண்டு வந்தார்கள்.

குழந்தைகளுடன் சேர்ந்து கேக் கட் செய்து சிறப்பாக கொண்டாடினோம். இது ஒரு சிறிய மகிழ்ச்சியான தருணம். மறக்க முடியாத ஒரு அனுபவம். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் இப்படி கொண்டாடுவதன் மூலம் நமது மகிழ்ச்சி பெருகுகிறது.

மனதிற்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் பரிசுகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பரஸ்பரம் அன்பு கூடுகிறது. இதுதான் எங்களுடைய குட்டி குடும்பம். இந்த குட்டிக் குடும்பத்துடன் நாங்கள், திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தோம்.

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்த்து சொல்ல வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது எனது மனமார்ந்த நன்றிகள். 

 மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,  அதுவரை தமிழ் போல் வளர்வோம்.

திங்கள், 13 மார்ச், 2023

இத்தனை வகை சாபங்களா???

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

3) குலதெய்வ சாபம் :

நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.

4) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். 

பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
 
7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

மார்ச் 10

 நிகழ்வுகள் 

1535 – பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.

1629 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.

1735 – ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.

1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1804 – லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1814 – பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள்” என்றார். அவை தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள்.

1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.

1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.

1902 – போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியப் படைகளுடனான கடைசிச் சமரில் வெற்றி பெற்றனர். 200 பிரித்தானியப் படைகள் கைப்பற்றப்பட்டனர்.

1902 – அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1906 – வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் பலி.

1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.

1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.

1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் பலி.

1945 – 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1952 – கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.

1959 – திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் சீன இராணுவத்தினரால் படுகாெலை  செய்யப்பட்டனர்.

1959 – திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.

1969 – அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

1970 – வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.

1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982 – கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1990 – ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1990 – Jennifer Capriati என்ற இளம் நங்கை தம் 13 ஆண்டு 11 மாதம் என்ற வயதில் நிபுணத்துவ டென்னிஸ் போட்டி ஒன்றில் இறுதிச் சுற்றை அடைந்து சாதனை படைத்தார்.

2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் பலி.

2006 – நாசாவினால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரெக்கனைசன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

               பிறப்புக்கள் 
1933 – பழ. நெடுமாறன், தமிழ்நாட்டு அரசியல்வாதி, தமிழ்த் தேசிய ஆதரவாளர்.

1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)

                 இறப்புக்கள் 

1966 – ஃபிரிட்ஸ் சேர்னிக்கே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)

2001 – சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

1. தீராத விக்கலா...?

  • ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்!
  • ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

2. கொட்டாவியை நிறுத்த...

கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்..  அதனால் 
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்.
கொட்டாவி போய்  சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

3. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

4. உடல் துர் நாற்றத்தைப்போக்க...

குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்க நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

5. வேனல் கட்டி தொல்லையா?

வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர கட்டி உடையும்.

6. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

7. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால்          முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

8. நீர்க்கோவை, தலைபாரம் குணமாக...

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

9. மூக்கு ஒழுகுவது நிற்க...

சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

10. ஜலதோஷம் :

சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

11. இருமலை போக்க...

புளியம்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்து  சட்னி 
செய்து சாப்பிட இருமல் நிற்கும்.

12. இட்லி மாவு மிருதுவாக இருக்க...

மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

13. சூடு பட்டுவிட்டால்...

சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

14. பாகற்காய் கசப்பு நீங்க...
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

ஜனவரி 5

கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1477 – பேர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டான். பேர்கண்டி பிரான்சின் பகுதியானது.

1554 – நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் சேதமாயின.

1655 – கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.

1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.

1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.

1854 – சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.

1900 – ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.

1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.

1918 – ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.

1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.

1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.

1945 – போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.

1967 – இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.

1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.

1974 – பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.

1975 – தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

1976 – கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.

1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.

1997 – ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.

2000 – இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

2005 – ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

2007 – கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.

பிறப்புகள்

1592 – ஷாஜகான், மொகாலயப் பேரரசர் (இ. 1666)

1876 – கொன்ராடு அடேனார், செருமனியத் அரசியல் தலைவர் (இ. 1967)

1902 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)

1917 – சி. டி. ராஜகாந்தம், நகைச்சுவை நடிகைtoday

1926 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)

1927 – சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (இ. 2001)

1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தான் அரசுத்தலைவர் (இ. 1979)

1932 – லலிதா, நாட்டிய நடிகை 

1932 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர்

1937 – சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)

1938 – நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்

1941 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)

1969 – மர்லின் மேன்சன், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1986 – தீபிகா படுகோண், இந்திய திரைப்பட ந‌டிகை

இறப்புகள்

1762 – எலிசவேத்தா பெட்ரோவ்னா (பி. 1709)

1933 – கால்வின் கூலிஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ( பி. 1872)

1943 – கார்வர், அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1864)

1952 – விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, ஸ்கொட்லாந்து அரசியல்வாதி (பி. 1887)

1970 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)

1981 – அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாலளர் (பி. 1893)

2000 – குமார் பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர், (பி. 1938)

ஏப்ரல் 06

 வரலாற்றில் இன்று 06          

கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார்.

1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார்.

1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார்.

1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை உருவாக்கினார்.

1712 – நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது.

1782 – தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.

1793 – பிரெஞ்சுப் புரட்சி: பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு பிரெஞ்சுக் குடியரசின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது.

1812 – பிரித்தானியப் படைகள் வெலிங்டன் பிரபுவின் தலைமையில் படாயோசு கோட்டையைத் தாக்கின.

1814 – பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் ராபர்ட் ஈ. லீ தலைமையில் தமது கடைசிச் சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.

1869 – செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.

1895 – ஆஸ்கார் வைல்டு இலண்டனில் கைது செய்யப்பட்டார்.

1896 – 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.

1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனி மீது போரை அறிவித்தது.

1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

1930 – மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்", என அறிவித்தார்.

1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா (யுகோசிலாவியப் படையெடுப்பு) மற்றும் கிரேக்கத்தை (கிரீசு சண்டை) நாட்சி ஜெர்மனி முற்றுகையிட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: சாரயேவோ செருமனிய, குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1965 – முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்டெல்சாட் I ஏவப்பட்டது.

1968 – அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.

1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1979 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.

1984 – கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.

1992 – பொசுனியப் போர் ஆரம்பமானது.

1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது.

1998 – அணுகுண்டு சோதனை: இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாக்கித்தான் சோதித்தது.

2005 – குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அரசுத்தலைவர் ஆனார்.

2009 – இத்தாலியில் ஆக்கிலா பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.

2010 – இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

2012 – அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.

2018 – கனடா, சஸ்காச்சுவான் நகரில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.

                     பிறப்புகள்

1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)

1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1876)

1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய செயற்பாட்டாளர் (இ. 1925)

1909 – ராம. அழகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957)

1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

1931 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)

1933 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016)

1938 – கோ. நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013)

1950 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி (இ. 2015)

1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்

1963 – ராஃபாயெல் கொறேயா, எக்குவதோரின் 54வது அரசுத்தலைவர்

1964 – டேவிட் வூடார்ட், அமெரிக்க எழுத்தாளர், இசைக்கலைஞர்

1973 – பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்

இறப்புகள்


1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)

1520 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483)

1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471)

1829 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (பி. 1802)

1961 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (பி. 1870)

1963 – ஆட்டோ சுத்ரூவ, உக்ரைனிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1897)

1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)

1974 – விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே, இந்துத்துவவாதி (பி. 1910)

1984 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915)

1992 – இல. செ. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர், இதழாளர் (பி. 1939)

1992 – ஐசாக் அசிமோவ், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)

2001 – தேவிலால், இந்திய அரசியல்வாதி (பி. 1914)

2008 – ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)

2011 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி. 1922)

2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952)


                  சிறப்பு நாள்


அபிவிருத்திக்கும் அமைதிக்குமான பன்னாட்டு விளையாட்டு நாள்


Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...