திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சருமம் பொலிவு பெறச்செய்யும் மாஸ்க்

1. சருமம் பொலிவு பெற ஃபேஸ் மாஸ்க்:-
10 உலர்ந்த திராட்சை,  டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு எடுத்துக் கொள்ளவும். திராட்சையை நன்கு அரைத்து விழுதாக்கி, தேன், எலுமிச்சை சாறு கலந்து உதடுகள், மற்றும் முகமெங்கும் பூசிக் கொள்ளவும். இப்படியே ஒரு மணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் சுத்தம் செய்யவும். சருமம் பொலிவுடன் காணப்படும்.

2.சப்போட்டா ஃபேஸ் மாஸ்க்:-

சப்போட்டா பழம் (பெரியது) – 1
ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
பாதாம் விழுது (அரைத்தது) – 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்

செய்முறை:–

சப்போட்டாவை, தோல், விதைகளை நீக்கி அரைத்துக் கொள்ளவும். மேலே உள்ள ஒவ்வொன்றையும் ஒன்றாகக் கலந்த கழுத்து, முகம், கண்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் அடர்த்தியாக போட்டுக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரால் இதமாக தேய்த்து சுத்தம் செய்யவும். இப்போது பாருங்கள், முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், முகம் எப்போதும் பொலிவுடன் விளங்கும்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

உயிரே...




கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

நண்பா...




சின்ன சின்ன,நினைவுகள்
இன்பங்கள்,துக்கங்கள்,எதிர்பார்ப்புகள்
என் நாயகன் நினைவுகள்,வெறும் கனவுகள்
இவை எல்லாம் எங்கெங்கோ,எப்பொழுதோ நடந்தாலும்;
உன் கண் அசைவினாலும் உன் நினைவாலும்
ஒரே நேரத்தில் நடக்கின்றன.
காலம் என்னும் கவிதை புத்தகத்தில்
வாழ்க்கையின் வர்ணனை பகுதியின்
முதல் வார்த்தை நட்பு
உருவத்தில் மயங்கி பருவ வாசலில்
புன்னகை நீர் தெளித்து போட்ட
முதற் கோலம் நட்பு
நிலவை நீர் உற்றி வளர்ப்பதும் இல்லை
சூரியனை தீ மூட்டி எரிப்பதும் இல்லை
இயற்கையின் படைப்புகள் அவை
அதனிலும் இன்னும் ஒன்று நம் நட்பு...

அவன்



நான் உயிரோடு இருப்பது
எல்லாருக்கும் தெரியும்..
ஆனால்
என்னுயிர் அவனோடு இருப்பது
யாருக்கு புரியும்!!!

ஹைக்கூ

இறந்தது மனிதன்
என்னை புதைப்பது எதற்கு???
குமுறியது சவ பெட்டி...

அவள்




ஒரு நாளில் வாடும்
பூக்களை பறிக்கவே
தயங்கியவள்...
என் காதல் பூவை
மட்டும் என் ஒடித்து விட்டாள்?

காதல்

காதலர் தினத்தன்று,
என் காதலை சொல்லிவிட்டு
பதிலுக்காக காத்திருந்த போது;
என் தவிப்பும்,
அவள் மௌனமும்,
கட்டி பிடித்து தவிக்கையில்
அவள் கால் விரல்களால்,கிறுக்கினாள்
சம்மதக் கோலம்...

காதல்




காதல் சொர்க்கம் தான்
காதலிக்கும் வரை...

என் அன்பே...

என்னுயிரே...
என் துன்பம் கண்டு
நீ துடிக்கிறாய்,
என் கண்ணீர் கண்டு
நீ துடைக்கிறாய்,
என் வேதனை கண்டு
நீ விம்முகிறாய்,
என் அன்பே...
எந்நாளும்
என் நினைவுகளை
நீ காட்டுவாய்
கனவுகளை கூட
என் உயிரே...
எந்நாளும்
உன்னை மறக்க
முடியாதே என்னால் !!!

யாரோ ஒருவன்...

உன் குரலை 
கேட்டதும் 
வானில் பறப்பது 
போன்று மனம் 
பரவசமடையும்.
கண்கள்
மகிழ்ச்சியில் 
படபடக்கும்.
இதயம் வேகமாக 
துடிக்கும்.
என்னவோ 
ஓர் இனிய அவஸ்தை 
நீ பேசும் மொழிகளின் 
உச்சரிப்பில்,
என் இயல்பை மாற்ற 
உன்னால் தான் முடியும்!

மனம்

சில தினங்களாக
நான்
இதை தான்
செய்கிறேன்...
உன் நினைவுகளை
வரிசைபடுத்தி
பார்க்கிறேன்...
ஆனாலும்
பார்க்க துடிக்கிறதே மனம்...
உன் நிலை என்னவோ...???

சிற்பம்


கடற்கரை மணலும் காட்சி பொருளானது
கலைஞனின் கை வண்ணத்தால்...

செவ்வாய், 31 ஜூலை, 2012

அந்த இரவு...

திரைகூத்து பத்திரிகையில் எனது சிறுகதை, வெளியிட்ட திரைகூத்து இதழுக்கும் திரு.ரஹீம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...



சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.
கோ 




தோட்டத்தில் உலவி கொண்டு இருந்த கவிதா ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.யாரும் தென்பட வில்லை,என்னவே சலசலப்பு வந்த திசையை நோக்கி மெதுவாக நடந்தாள்.யாரும் தென்பட வில்லை.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே தென்பட வில்லை.

"யாரூ?" குரல் கொடுத்தாள்.பதில் வர வில்லை.

யாரோ தன்னை நோக்கி வருவது போல் தோன்றியது,ஆனால் அப்படி யாரும் வர இல்லை.அங்கும் இங்கும் சுற்றி பார்த்தாள். இதற்கு மேலும் அங்கு இருப்பது நல்லதில்லை என்று உணர்ந்து, வேகமாக நடந்தாள்.யாரோ பின் தொடர்வதை போல் உணர்ந்தாள்.ஒரு நொடி நின்று பின்னால் திரும்பி பார்த்தாள்.யாரும் இல்லை.

"யாராவது இருக்கீங்களா ?"பதில் இல்லை.இது தனது பிரமை என்று நினைத்துக் கொண்டு மீண்டும் நடக்க தொடங்கினாள்.மீண்டும் அதே காலடி ஓசை.நிச்சயமாக,யாரோ பின் தொடர்கிறார்கள் என் நினைத்து வேகமாக ஓடினாள்.

உச்சி வெயிலில் கல்லிலும் முள்ளிலும் ஓடி ஓடி களைத்து போய் மயங்கி விழுந்தாள்.மயக்கம் தெளிந்து பார்க்கையில் தான் ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"நான் இங்கு எப்படி வந்தேன்?"யோசித்து பார்த்தாள் ஆனால் ஏதும் நினைவிற்கு வர வில்லை.நிலவின் ஒளி தவிர வேறு எந்த வெளிச்சமும் தெரிய வில்லை.

"ஹலோ,யாராவது இருக்கீங்களா?"குரல் கொடுத்து பார்த்தாள்.ஆனால் எந்த பயனும் இல்லை.பதில் ஏதும் இல்லை.திடீர் என்று சில்லேன்று காற்று விசியதும் மரங்கள் எல்லாம் வேகமாக அசைந்ததில்,ஏற்பட்ட சத்தத்தை கேட்டு  ஒரு நிமிடம் பயத்தில் உறைந்து போனாள்.

எப்படியாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து, எழுந்து நடக்க தொடங்கினாள். ஆந்தைகளின் அகவல்களும்,நரிகளின் ஊளைகளும் அவளை குலை நடுங்க செய்தன.எப்பொழுதும் வீட்டை விட்டு, தனியே வெளியே வராதவள் இன்று இப்படி யாரும் இல்லாத  கட்டுக்குள்  சிக்கி தவிக்கிறாள்.அந்த காட்டில் மரங்களின் நிழல்கள் கூட அவளை அச்சுறுத்தின.

காட்டுக்குள் தனியாக பயந்து பயந்து நடந்து சோர்ந்து போனாள்.ஆள் நடமாட்டமே இல்லாத இந்த காட்டுக்குள் நம்மை யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று எங்கியவள்,இனி யாரும் வந்து காப்பாற்ற போவதில்லை என்று நினைக்கையில் அவளுக்கு அழுகை வந்தது.இன்று கிலசரின் இல்லாமலே கண்ணீர் வழிந்து அவள் கன்னங்களை ஈரப்படுத்தியது. தூரத்தில் ஏதோ ஒரு வெள்ளிச்சம் தென்பட்டது.

பயத்தில் உறைந்து,சோர்ந்து போயிருந்த அவளுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சமாக அது தோன்றியது. வெளிச்சம் வந்த திசையை நோக்கி ஓடினாள்.ஒரு மூதாட்டி நெருப்பு மூட்டி குளிர்  காய்ந்து கொண்டிருந்தாள்.அவர்களை பார்த்ததும் நிம்மதி பேருமுச்சி விட்டபடி அவர் அருகில் சென்று உட்கருந்து கொண்டாள்.

"இந்த நெருப்பு குளிருக்கு இதமா இருக்கு இல்ல ?" என்று மூதாட்டியை பார்த்தாள்.
அதை ஆமோதிப்பது போல் தலையாசைத்தாள் அந்த மூதாட்டி.

"இந்த நேரத்தில் நீங்க இங்கே என்ன பண்றீங்க?" என்று பேச்சை தொடங்கினாள்  கவிதா.

"அது ஒரு பெரிய கதை" என்று பேரு முச்சு விட்டாள் மூதாட்டி.

"என் கணவர் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இறந்து விட்டார்.எனக்கு இரண்டு மகன்கள்.நன்றாக அவர்களை வளர்த்து படிக்க வைத்து.அரசாங்க வேலையும் வாங்கி கொடுத்து.நல்ல முறையில் கல்யாணமும் செய்து வைத்தேன்.திருமணதிற்கு பிறகு மனைவி இனித்தாள்,தாய் கசந்தேன்.என் சொத்தை எழுதி வாங்கி கொண்டு என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட திட்டம் போட்டார்கள் அதற்காக என் மருமகள்கள் என்னை சித்தரவதை செய்தார்கள் அதை எல்லாம் தாங்க முடியாமல் நான்.என் சொத்தை அநாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு இங்கு வந்து சேர்த்தேன்" என்றாள்

கவிதாவிற்கு ஒரு கணம் இதயம் நின்று விட்டு துடித்தது.அந்த மார்கழி பனியிலும் வியர்த்து கொட்டியது.சுதாரித்து கொண்டு அந்த மூதாட்டியை பார்த்து கேட்டாள்.

"அப்புறம் எப்படி பிழைத்தீர்கள்?"

"ஹா ஹா ஹா... பிழைத்திருந்தா சுடுகாட்டுல எதுக்கு இருக்க போறேன்?நான் செத்து நாலு வருஷம் ஆகுது" சிரித்தபடியே விடையளித்தாள் மூதாட்டி.

கவிதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.இவ்வளவு நேரம் தான் பேசிக் கொண்டிருந்தது ஒரு ஆண்மாவிடம் என்ற நினைப்பே அவளுக்குள் ஒருவித அச்சம் கலந்த நடுக்கத்தை ஏற்படுத்தியது. 

அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீள்வதற்கு முன்பே அந்த மூதாட்டி தொடருந்தாள்.

"ஏதோ என் கஷ்டகாலம் நான் இப்படி செய்து விட்டேன்.ஆனால் நீ எதற்கு தற்கொலை செய்து கொண்டாய்?காதல் தோல்வியா என்ன?"

அந்த கேள்வி அவளை ஒரு கணம் உலுக்கி விட்டது. அவள் முற்றிலும் நிலை குலைந்து போனாள்.

"என்ன உலறுகிறிர்கள் நீங்கள்?நான் வளர்ந்து வரும் இளம் நடிகை.இன்னும் ஒரு வாரத்தில் என்னக்கும் பிரபல தொழிலதிபர் மகன் கார்த்திக்கிற்கும்  திருமணம்.அப்படி இருக்கும் போது நான் எதற்கு முட்டாள் தனமா தற்கொலை எல்லாம் செய்து கொள்ள போகிறேன்???"

"அதெல்லாம், எனக்கு எப்படிம்மா தெரியும்?உன்னை புதைக்க வந்த போது உன் பெற்றோர் கதறி அழுதபொழுது காதில் விழுந்ததை தான் உன்னிடம் கேட்டேன்" என்று பதிலளித்தாள்.

"சரி வந்து படு....பொழுது விடிய போகுது"என்று கூறி தன் கல்லறைக்குள் சுருண்டு கொண்டாள் மூதாட்டி.

"ஆனால் நான் இப்போது தானே காட்டில் இருந்து ஓடி வந்தேன்?" என்ற கேள்வியுடன் மூதாட்டியை குழப்பத்துடன் நோக்கினாள்.

"காட்டிலும் மேட்டிலும் அலைவது தானே நம்போன்ற ஆன்மாக்களின் வேலை.போக போக உனக்கும் பழகி விடும்"

அப்பொழுது தான்,அவள் நினைவிற்கு வந்தது.தன் காதலன் கார்த்திக்குடன் அவன் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துத் தூங்கியது.பிறகு எப்படி  தான் தற்கொலை செய்திருக்க முடியும்?புரியாமல் தவித்தாள்


-------------------- முற்றும் -----------------------------

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...