ஞாயிறு, 20 ஜூலை, 2025

உயிருள்ள மீன் ஆஸ்துமா நோய்க்கான மருந்து

என் சித்தியின்  மகனுக்கு ஆஸ்துமா இருந்தாலும் அவன் மிகவும் அவதி பட்டு வந்தனர். அப்போது ஐதராபாத் மீன் மருத்துவம் பற்றி கேள்விபட்டு 
அங்கு அழைத்து சென்று மருந்து வாங்கி கொடுத்த பின்னர் இப்போது அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லமல் நிம்மதியாக இருக்கிறான். 
ஐதராபாத்தில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு  வரும் மருத்துவ சிகிச்சை ஆகும். ஆஸ்துமா நோய்க்கான மருந்து உயிருள்ள மீனின் வாயில் வைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. நோயாளிகளும் மருந்துடன் கூடிய சிறு மீனை அப்படியே விழுங்கி விடுகிறார்கள்.

பாதினி மீன் மருந்து (பாதினி மிருகசிர மீன் என்றும் அறியப்படும்) இரண்டு அல்லது இரண்டரை அங்குல நீளமுள்ள உயிருள்ள  விரால் மீன் (murrel fish) வாயில் திணிக்கப்படுகிறது. இந்த மீன், மருந்துடன் ஆஸ்துமா நோயாளியின் வாய் வழியாக விழுங்க வைக்கப்படுகிறது. (இந்த மீன் வழவழப்பாக இருப்பதால் விழுங்குவதில் சிக்கல் இருப்பதில்லை). உயிருடன் உள்ள இந்த மீன் தன் வாலையும் செதில்களையும் அசைத்தபடி நோயாளியின் தொண்டையில் பயணித்து சளி அடைப்புகளை ) உடைத்து ஆஸ்துமாவை குணமாக்குவதாகக்  கூறப்படுகிறது. 

இந்த 45 நாட்கள் கடும் பத்திய உணவு மேற்கொண்டு தொடர்ந்து மூன்று வருடங்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளுமாறு நோயாளி அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு மேற்கொள்ளும் சிகிச்சை ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

பாதினி மீன் மருந்து ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் தொடங்கும் நாட்களையொட்டி, ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரம் மிருகசீர்ஷா கார்த்திகை (வைகாசி (ஜ்யேஷ்ட) மாதம்) நன்னாளில் நோயாளிகளுக்கு தரப்பட்டு விழுங்க வைக்கப்படுகிறது. மூன்று மேலதிகமான மருந்தளவுகள் (doses of the extra medicine) நோயாளிகளுக்கு தொடர்ந்து வரும் கார்த்திகை நட்சத்திர நாட்களான ஆருத்ரா கார்த்திகை, புனர்வசு கார்த்திகை மற்றும் புஷ்யமி கார்த்திகை நாட்களில் வழங்கப்படுகிறது. (பதினைந்து நாட்கள் இடைவெளியில் மொத்தம் 45 நாட்கள் அடங்கிய காலம்). இந்த சிகிச்சை முறையை எடுத்துக் கொள்பவர்கள் இந்த 45 நாட்கள் அடங்கிய காலகட்டத்தில் கடும் பத்தியம் அனுசரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக