செவ்வாய், 26 அக்டோபர், 2021

அக்டோபர் 26

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது.

1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார்.

1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார்.

1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார்.

1775 – அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார்.

1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்குப் பயணமானார்.

1859 – வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.

1863 – உலகின் மிகப் பழமையான காற்பந்துச் சங்கம் இலண்டனில் அமைக்கப்பட்டது.

1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.[1]

1905 – நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கீகரித்தது.

1909 – சப்பானியப் பிரதமர் ஈட்டோ இரொபூமி மஞ்சூரியா, கார்பின் தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1912 – முதலாம் பால்கன் போர்: உதுமானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தெசாலோனிக்கி நகரம் விடுவிக்கப்பட்டு கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது. இதே நாளில் செர்பியப் படைகள் ஸ்கோப்ஜே நகரைக் கைப்பற்றின.

1917 – முதலாம் உலகப் போர்: கப்பொரெட்டோ சமரில் இத்தாலியப் படைகள் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளுடன் மோதி பெரும் இழப்பை சந்தித்தன.

1917 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் செருமனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.

1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.

1936 – முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1947 – சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.

1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.

1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.

1958 – பான் அமெரிக்கன் ஏர்வேய்சு போயிங் 707 இன் முதலாவது வணிக-நோக்குப் பறப்பை நியூயோர்க் முதல் பாரிசு வரை மேற்கொண்டது.

1967 – முகம்மத் ரிசா பகுலவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.

1968 – சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.

1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.

1979 – தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1985 – ஆத்திரேலிய அரசு ஊலூரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.

1991 – யுகோசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியாவில் இருந்து விலகியது.

1994 – யோர்தானும் இசுரேலும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1994 – பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் பாதி சிக்காகி மால்ட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.

2000 – ஐவரி கோஸ்ட்டின் அரசுத்தலைவர் இராபர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரண்ட் பாக்போ தலைவரானார்.

2001 – ஐக்கிய அமெரிக்கா தேசப்பற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.

2002 – மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

2003 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

2015 – 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.

2016 – இத்தாலியின் நடுப்பகுதியை 6.6 அளவு நிலநடுக்கம் தாக்கியது.

பிறப்புகள்

1841 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1886)

1873 – ஏ. கே. பசுலுல் ஹக், வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 1962)

1883 – நெப்போலியன் ஹில், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1970)

1890 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி, இந்திய இதழியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1931)

1892 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (இ. 1950)

1902 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (இ. 1980)

1919 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானின் அரசுத்தலைவர் (இ. 1980)

1920 – சாரா இலீ இலிப்பின்கோட், அமெரிக்க வானியலாளர்

1923 – இராம் பிரகாசு குப்தா, இந்திய அரசியல்வாதி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் (இ. 2004)

1932 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடக முதலமைச்சர் (இ. 2011)

1933 – முருகேசு சுவாமிகள், ஈழத்து ஆன்மிகவாதி (இ. 2007)

1947 – இலரி கிளின்டன், அமெரிக்க அரசியல்வாதி

1947 – சாருமதி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1998)

1952 – லார்ஸ் பீட்டர் ஹான்சென், அமெரிக்கப் பொருளியலாளர்

1959 – ஏவோ மொராலெஸ், பொலிவியாவின் 80வது அரசுத்தலைவர்

1965 – மனோ, தென்னிந்தியத் திரைப்பட பாடகர்

1974 – ரவீணா டாண்டன், இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்

1985 – அசின் (நடிகை), தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1991 – அமலா பால், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

899 – ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849)

1764 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)

1879 – அ. சந்திரசேகர பண்டிதர், மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞர்

1930 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிசு மருத்துவர் (பி. 1860)

1957 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (பி. 1896)

1974 – மிர்துலா சாராபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)

2013 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர் (பி. 1927)

வியாழன், 18 மார்ச், 2021

மார்ச் 18

 

மார்ச் 18

நிகழ்வுகள்
************
1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

1438 - ஹாப்ஸ்பேர்க்கின் இரண்டாம் ஆல்பேர்ட் ஜெர்மனியின் மன்னனாக முடி சூடினான்.

1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1874 - வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1909 - ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.

1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.

1922 - ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.

1925 - இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் கொல்லப்பட்டனர்.

1937 - டெக்சாஸ் மாநிலத்தில் நியூ லண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டிணைந்தனர்.

1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பேர்லின் நகரைத் தாக்கின.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் ஜப்பானுக்கும் நேச நாடுகளிக்கும் இடையில் ஒகினவா சமர் ஆரம்பமாகியது.

1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1965 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.

1970 - கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.

1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - ரஷ்யாவில் வஸ்தோக்-2எம் ஏவுகணை ஏவப்படுகையில் வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

2003 - ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

2003 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் ஜப்பான் ஹாக்கோன் நகரில் ஆரம்பமாயின.

பிறப்புக்கள்
**************
1828 - வில்லியம் கிரேமர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1908)

1837 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)

1858 - ருடோல்ஃப் டீசல், ஜெர்மனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1913)

1919 - இந்திரஜித் குப்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். (இ. 2001)

1936 - பிரடெரிக் கிளார்க், தென்னாபிரிக்க அதிபர், நோபல் பரிசு பெற்றவர்

இறப்புக்கள்
***************
1889 - வில்லியம் நெவின்ஸ், யாழ் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியர், ஆங்கிலம்-தமிழ் அகராதி தொகுத்து வெளியிட்டவர்

1996 - ஒடீசியஸ் எலீட்டிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர் (பி. 1911)

2007 - பாப் வுல்மர், துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் (பி. 1948)

சிறப்பு நாள்
**************
துருக்கி - கலிப்பொலி நினைவு நாள்
.

செவ்வாய், 16 மார்ச், 2021

மார்ச் 16

இன்று

மார்ச் 16

நிகழ்வுகள்
*************
கிமு 597 - பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.

1190 - சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

1521 - மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.

1792 - சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.

1926 - முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.

1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 - பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 - ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 - வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 - வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.

1988 - ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2006 - மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

பிறப்புகள்
**********
1751 - ஜார்ஜ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1836)

1789 - கியோர்க் ஓம், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1854)

1839 - ரெனே சளி-புரூடோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1907)

1918 - பிரெடெரிக் ரெயின்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)

1929 - இரா. திருமுருகன், தமிழறிஞர்

1953 - ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.

1954 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)

இறப்புக்கள்
************
1914 - சார்ல்ஸ் கோபட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)

1935 - ஜோன் மாக்லியட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)

1940 - செல்மா லாகர்லோஃப், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1858)

1945 - எம். ஜே. லெகொக் அடிகளார், அருட்தந்தை (பி. 1880)

1989 - அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய கவிஞர். (பி. 1922

1998 - டெரெக் பார்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)


திங்கள், 15 மார்ச், 2021

மார்ச் 15

இன்று

மார்ச் 15

நிகழ்வுகள்
******"***""**"
கிமு 44 - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.

933 - பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் ஜெர்மானிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1493 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.

1776 - தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1815 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.

1848 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1877 - முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ணில் ஆரம்பமானது.

1917 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் த்சார் மன்னன் முடி துறந்தான்.

1922 - எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானான்.

1943 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியப் படைகள் உக்ரேனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.

1970 - எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1984 - விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.

1985 - முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1988 - ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.

1990 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1991 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004 - சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007 - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
*************
1767 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1845)

1830 - பவுல் ஹெயிஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் (இ. 1914)

1854 - எமில் பேஹ்ரிங்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1917)

1915 - அழகு சுப்பிரமணியம் ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)

1920 - டொன்னல் தோமஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1930 - அல்ஃவியோரவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர்

இறப்புக்கள்
**************
கிமு 44 - யூலியஸ் சீசர், ரோமன் குடியரசின் மன்னன் (பி. கிமு 100)

1897 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், கணிதவியலர் (பி. 1814)

1962 - ஆர்தர் கொம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1892)

2004 - ஜோன் போப்பில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1925)

சிறப்பு நாள்
************
ஜப்பான் - ஒவுனென் மட்சுறி, புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா.

உலக நுகர்வோர் நாள்


ஞாயிறு, 14 மார்ச், 2021

மார்ச் 14

இன்று

மார்ச் 14

நிகழ்வுகள்
************
1489 - சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.

1794 - எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1898 - டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1926 - கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

1939 - செக்கோசிலவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.

1951 - கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.

1978 - இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.

1979 - சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.

1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.

1995 - ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.

1998 - தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2007 - மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - முதல் உலக கணக்கு தினம் கொண்டாடப்பட்டது.

பிறப்புக்கள்
*************
1879 - அல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் (இ. 1955)

1918 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (இ. 2001),

1965 - அமீர் கான், நடிகர்

இறப்புக்கள்
******"*******
1883 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1818)

1932 - ஜோர்ஜ் ஈஸ்ற்மன் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1854)

1995 - வில்லியம் பவுலர், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

சிறப்பு நாள்
*************
பை நாள்


வியாழன், 18 பிப்ரவரி, 2021

இயற்கை வைத்தியம்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாடு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...