சனி, 12 ஏப்ரல், 2014

சொக்கன்

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ







மருத்துவமனையில் பிரசவ வலியுடன் தவித்துக் கொண்டிருந்த கண்ணம்மாவை விட அவள் கணவனுக்கு தான் தவிப்பு அதிகமாக இருந்தது. என்னென்றால் அவன் கூட பிறந்த அண்ணனுக்கும் தம்பிக்கும் மட்டுமல்லாமல் இவனுக்கு பிறந்த  முதல் குழந்தையும்  பொட்ட புள்ளையா பொறந்ததால்  இனி அவங்க குடும்பத்துக்கே கொள்ளி போடா வாரிசு இல்லை என்று கேலியும் கிண்டலுமாக பேசினார்கள்.

"இந்த குழந்தையாவது ஆம்பளை புள்ளையா பொறக்கலைன்னா எல்லோரும் என்ன சொல்லுவாங்களோ என்னமோ" என்றாள் வருத்தம் கலந்த குரலில் கண்ணம்மா.

"அட சும்மா இரு கண்ணம்மா,ஊரார் பேசுராங்கனோ உறவுங்க ஏசுராங்கனோ நாம கவலை பட்டு என்ன செய்யுறது? கடவுளா பார்த்து கண்ணு திறந்தா தான் உண்டு" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னானே தவிர அவனுக்கும் அதே கவலை தான்.

கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் குட்டி போட்ட பூனை போல அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தான்.

நர்ஸ்சம்மா வந்து உங்களுக்கு "பையன் பொறந்திருக்கான்னு" சொன்னதும் அவனுக்கு சந்தோசத்துல தல காலு புரியல.

கொழந்தைய பார்த்ததும்"டேய் மணி, எங்கப்பன் அந்த சொக்கன் தான் உனக்கு மகனா வந்து பிறந்திருக்கார்"என்று பெருமிதத்துடன் சொன்னாள் அவன் அம்மா குருவம்மா.

மணியும் அவன் மனைவியும் ரயில் வண்டிக்கு கரி அள்ளி போடுபவர்கள் போல் அட்டை கருப்பு. அவர்களுக்கு பிறந்த பொட்ட புள்ளையும் அவர்களை அச்சு வார்த்தது போல பிறந்தாள்.இப்போ தங்கம் மாதிரி பொன் நிறத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

அந்த கடவுள் சொக்கனோட அருளால மூக்கும் முழியுமாய் ஒரு ஆம்பளை புள்ளை பொறந்திருச்சு.

மணிக்கு சந்தோசத்தில் கால்கள் தரையில் நிற்க வில்லை.தன் மகனை கையில் வைத்துக் கொண்டு தன் மனைவியை பார்த்து,
"ஏ புள்ள, நம்ம புள்ளைய பார்த்தியா? தோரா மாதிரி இருக்கான் இல்ல?"என்று பெருமிதத்துடன் மீசையை முறுக்கினான்.

அவள் புன்னகையுடன் தலை அசைத்தாள்.

"ஆத்தா இவனுக்கு என்ன பெயர் வெக்கலாம்?" அவன் அம்மாவிடம் கேட்டான்.

 "எங்க அப்பன் சொக்கன் பேரையே வை" என்றாள் வெற்றிலையை மென்றுக் கொண்டிருந்த குருவம்மா.

"அட போ ஆத்தா, என் மகன் ராசா மாதிரி இருக்கான் அவனுக்கு போய் சொக்கன்,குப்பன்னு பேரு வெக்க சொல்றியே.உனக்கு ஒன்னும் தெரியல ஆத்தா. அவனுக்கு ஸ்டைலா பேரு வெட்க போறேன்."என்று கடிந்துக் கொண்டு தன் மகனை கையில் அள்ளிக் கொண்டு கொஞ்சினான்.

"டேய் மணி,அது நம்ம குலதெய்வத்தொட பேருடா. அப்படி எல்லாம் சொல்லாதே தெய்வ குத்தம் ஆயிடும்" என்றாள் 

மணி அதை காதில் வாங்காமல் தன்  மகனை கொஞ்சிக் கொண்டிருந்தான். பின்னர் ஊரிலிருக்கும்  அவனுடைய சகோதரர்களுக்கு போன் செய்து
"அண்ணா நம்ம குடும்பத்துக்கு வாரிசு பிறந்தாச்சு" மகிழ்ச்சியோடு  சொன்னான்.

பிறகு "ஆத்தா நான் போய் புள்ளைக்கு துணிமணி வாங்கிட்டு வரேன்"என்று தனது சைக்கிளை கிளப்பினான்.

கடைக்கு சென்றவன் அங்கு கண்ணில் பட்டதை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்தான்.

தன மகனை கையில் தூக்கிக் கொண்டு "ராசு குட்டிக்கு அப்பா என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு.இது சட்டை, இது தொப்பி, இது உனக்கு குளிராம இருக்குறதுக்கு சொட்டறு இத பார்த்தியா யானை பொம்மை, யானை வருது யானை வருது"என்று அவன் பாட குழந்தை சிரித்தது.

"புள்ள மேல எம்புட்டு பாசமோ பாரு இவனுக்கு"என்று சிரித்தபடி வெற்றிலை போட சென்று விட்டாள் குருவம்மா.

அப்பா புள்ளை விளையாட்டை ரசித்தபடி தூங்கிவிட்டால் அவன் மனைவி.

ஒரு நர்ஸ் வந்து "சார், குழந்தையை கொடுங்க டெஸ்ட் பண்ணனும்"என்றாள்.
விளையாடி கொண்டிருந்த அவன் "நாம அப்பறம் விளையாடலாம்."என்று அவளிடம் குழந்தையை கொடுத்தான்.

 நர்ஸிடம் குழந்தையை கொடுத்து விட்டு பொம்மைகளோடு பேசி கொண்டிருந்தான் அவன்.

வெற்றிலையை போட்டுவிட்டு சிவந்த வாயோடு வந்த குருவம்மா, மணி மட்டும் தனியாக பொம்மைகளோடு பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போய் "என்னடா தனியா பேசிகிட்டிருக்கே?புள்ள எங்கே?"என்றாள்.

"நர்ஸம்மா செக்கப்புக்கு கொண்டு போயிருக்காங்க" என்றான் சாதாரணமாக.

"செக்கப்பா என்ன செக்கப்பு?" என்று பதட்டத்தோடு சத்தமாக கேட்க தூங்கி கொண்டிருந்த அவன் மனைவி விழிக்க எல்லோரும் சேர்ந்து போய் டாக்டரிடம் தகவல் சொன்னார்கள்.

அப்படி எந்த நர்சும் குழந்தையை தூக்கி வரவில்லை என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்து போயினார்கள்.

அங்கு வேலை செய்யும் அனைத்து உழியரும் ஒன்று திரண்டு நின்றனர்.மணி அவர்களில் குழந்தையை வாங்கி சென்றவரை அடையாளம் காண முற்பட்டான் ஆனால் அந்த பெண் சாயலில் அங்கு யாரும் இல்லை.

குழந்தை கடத்தப்பட்ட தகவல்  போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது.

"ஐயோ,பிரவேட்டு ஆஸ்பத்திரிக்கு போனா காசும் புடுங்கிட்டு சுக பிரசவம் ஆக விடாம ஆபரேசன் செய்யுறாங்கன்னு அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வந்தா இங்க இப்படி குழந்தையகடத்திட்டாங்கலே. நான் என்ன செய்வேன் கடவுளே.இப்போ புள்ளைய நான் எங்கே போய் தேடுவேன்" என்று கதறினாள் கண்ணம்மா.

"அப்பனே சொக்கா, குடும்பத்துக்கு கொல்லி போடா வாரிசு பொறந்திருக்குனு சந்தோசபட்டேனே.அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நிலைக்காம இப்படி பண்ணிட்டியே " குமுறினாள் குருவம்மா.

  "அப்பனே சொக்கநாதா, சொக்கன்னு பேரு வெக்கமாட்டேன்னு சொன்னதுக்கா இப்படி பண்ணிட்டே? உனக்கு தான் ஸ்டைல ஆயிரம் பேரு இருக்கே?என் கையாலேயே என் புள்ளையை தூக்கி கொடுக்க வெச்சிட்டியே?"என்று கதறி அழுதான்.

அதற்குள் போலீசாரும் பத்திரிகைகாரர்களும் மருத்துவமனையை சூழ்ந்தனர்.

புள்ளையை பரிகொடுத்த துக்கத்தில் இருந்தவர்களிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டனர்/

மணி உடைந்து போனான்.ஆஸ்பத்திரியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் குழந்தையை எடுத்துச் சென்றவர்களின் முகம் பதிந்திருக்கும் என்று ஒரு மருத்துவர் கூற "குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது அவர்கள் மனதில்.

போலீசார் கண்காணிப்பு கேமராவை சோதனையிட்ட போது அது கடந்த பல மாதங்களுக்கு முன்பாக பழுதாகி விட்டதால் அதிலுள்ள ஹர்டு டிஸ்க் கழற்றப்பட்டு விட்டது என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

"யார் கண்பட்டதோ என்னவோ. அப்பனே சொக்கா"என்று கதறினால் குருவம்மா.

நொந்து போன மணி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
கால்கள் போன போக்கில் சைக்கிளை மிதித்தான். அவன் மனதில் பூத்த சந்தோச பூவை யாரோ பறித்து விட்டார்கள்"

ட்ராபிக்கில் நின்றிருந்த போது ஒரு பெண் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.
புள்ளையை தொலைத்த அவன் மனம் அவன் நினைவுகளையே அசை போட்டது. அந்த சின்ன சின்ன பிஞ்சு விரல்களால் அவன் வருடும்  போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திராட்சை போன்ற அழகிய கண்கள் என்று அவனையே சுற்றி சுற்றி வந்தன.

குழந்தை வெயில் தாங்க முடியாமல் வீறிட்டு அழுதது.அந்த பிச்சை எடுக்கும் பெண் சிக்னலில் குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாதை அப்பொழுது தான் கவனித்தான்.

சைக்கிளை அப்படியே விட்டு விட்டு சொக்கா சொக்கா என்று ஓடி போய் அவள் சிக்னலை கடந்து செல்லும் போது அவள் கையிலிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டு சொக்கா சொக்கா என்று முத்த மழையால் அவன் கன்னங்களை நனைத்தான்.

அதை பார்த்ததும் அவள் திடுகிட்ட நின்றாள். அவன் குழந்தையை கொஞ்சி முடித்ததும் "அய்யா,என் குழந்தையை கொடுங்கோ நான் போகணும்" என்று கைகளை நீட்டினாள்.

அது அவன் குழந்தை இல்லை என்று உணர்ந்த அவன் ஏமாற்றத்துடன் குழந்தையை அவளிடம் திருப்பிக் கொடுத்து சோகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி சிணுங்கியது. சைக்கிளை ஓரமாய் நிறுத்தி எதிர் முனையில் கண்ணம்மா "என்னங்க, எங்கே இருக்கீங்க?நம்ம புள்ள கிடைச்சிட்டன். இதே ஆஸ்பத்ரில புள்ளை இறந்த ஒரு அம்மாக்கு நம்ம புள்ளைய வித்துட்டு போயிருக்கா அந்த பொம்பளை.நீங்க உடனே வாங்க" தொலைந்த சந்தோஷம் மீண்டும் கிடச்ச சந்தோசத்தில் உற்சாகமாக சொன்னாள்.

"அப்பனே சொக்கா, உனக்கு கோடி நன்றி என்புல்லையா திருப்பி கொடுத்திட்டே.அவனுக்கு சொக்கன்-னு உன் பேரையே வெக்கறேன்"என்று பூரித்துப் போய் ஆஸ்பத்திரியை நோக்கி சைக்கிளை மிதித்தான் மணி.


----------------------------------முற்றும்-----------------------

சனி, 5 ஏப்ரல், 2014

அழகான பரிசு

ஈஸ்டர் தினத்தில் தினத் தந்தி "குடும்பமலர்" வெளியான எனது கதை. வெளியிட்ட ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றி 






சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ 

"என்னங்க நீங்க அப்பா ஆகா போறீங்க " என்று சுமதி சொன்ன அடுத்த நொடி அவன் சந்தோஷத்தில் மிதந்தான்.

அவன் பெற்றோரின் இறப்புக்கு பின் சொந்தங்கள் எல்லாம் அன்னியமாகி போக இவன் அனாதையாகி  போனான். இருப்பினும் கவலை படாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து தன் படிப்பை தொடர்ந்தான்.

நல்ல கல்லூரியில் சேர்ந்து நன்றாக படித்து கம்புஸ் இண்டர்வியூவில் நல்ல வேலையும் கிடைத்தது.

இவனை விட்டு ஓடிய சொந்தங்கள் எல்லாம் நான் பெண் தரேன் நான் பெண் தரேன் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தன அனால் அவனோ ஒரு அனாதை பெண்ணை மணந்தான்.

ஒட்டிக் கொள்ள வந்த சொந்தம் மீண்டும் விட்டுச் சென்றது.
எனவே அவனுக்கு என்று இருக்கும் ஒரே சொந்தம் அவன் மனைவி சுமதி மட்டும் தான்.அவள் தாயாக போகும் தருணத்தில் அவளை சந்தோசமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.அவன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவளை ஒரு சின்ன வேலை கூட செய்ய விடாமல் ஒரு தேவதையை போல் பார்த்துக் கொண்டான். ஆனாலும் அவள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம். அவள் தாயாக போகிறாள் என்கிற சந்தோஷம் அவள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிய வில்லை அதை உணர்ந்த அவன் என்னமோ ஏதோ என்று பதறிப்போய் "என்னம்மா? உடம்புக்கு முடியலையா?ஏன் ஒரு மாதிரி இருக்கே?" என்றான்.

ஒன்றுமில்லை என்று மழுப்பினாள்.

இந்த நேரத்தில் அம்மா இருந்தால் எவ்வளவு ஆதரவாக இருக்கும். தாயாக போற பெண்ணை ஒரு தாயை தவிர வேறு யாரு புரிஞ்சிக்க முடியும். வாயிக்கு ருசியா ஆசையா சமைச்சி வேண்டாம் என்றாலும் அன்பாய் ஊட்டிவிடும் அன்னைக்கு நிகர் வேறு யாரு. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இப்படி அனாதையா வாழ வேண்டி இருக்கு என்று தன்னை நொந்துக் கொண்டாள் .

"என்னடா உனக்கு அம்மா இல்லையேனு கவலை படுறியா? என்று எதேச்சையாக கேட்டான்.

உடனே அவள் கண்களில் அருவியாய் கொட்டியது கண்ணீர்.
"ஹேய், என்ன ஆச்சு மா?ஏன் அழறே?"என்று அவள் தோலை பற்றி அன்பாய் கேட்டான்.

அவள் மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள். பின் சுதாரித்துக் கொண்டு சொன்னால் "இந்த மாதிரி சமயத்தில் அம்மா இருந்த நல்ல இருக்கும்னு தோணுது."

அவள் வருத்தத்திற்கு காரணம் தெரிந்த சந்தோசத்தில் "அட பைத்தியமே இதுக்கா ஒரு வராம இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சிகிட்டு இருக்கே?" என்றான்.

அவள் ஆச்சரியத்துடன் அவனையே பார்த்தாள்.

"நாளைக்கு உனக்கு பிறந்த நாள். சோ உனக்கு பிடிச்ச பிறந்த நாள் பரிசு தரேன்."
அவள் கண்ணகளை செல்லமாக கில்லி என்றான்.

மேலும் அவனே தொடர்ந்தான் "சாயங்காலம் சீக்கிரம் வரேன் ரெடியா இரு ஷாப்பிங் போகலாம்." என்று சொல்லிவிட்டு சென்றவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

அன்று மாலை  ஷாப்பிங்  முடித்து அப்படியே வெளியே ஹோட்டல்ல  சாப்பிட்டு வீட்டிற்கு வந்தனர்.

மறுநாள் காலையில் காபி கப்புடன் வந்து அவள் கணவன் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர்"என்று செல்லமாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை எழுப்பினான். 

"ம்ம்ம் தேங்கிஸ் "என்றாள் தூக்க கலக்கத்துடன். 

அவள் காபி குடித்ததும் "சரி வா உனக்கு ஒரு பரிசு வாங்கி வந்திருக்கேன். பிடிச்சிருக்கானு வந்து பார்த்து சொல்லு என்றான்.

என்ன என்பதை போல் இமைகளை உயர்த்தினாள்.

"வந்து பாரு" என்று அவள் கையை பிடித்துக் இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அங்கே பாதி நரைத்த  முடியுடன் மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு பெண் சோபாவில் உட்கார்ந்திருந்தார்கள்.

அவள் தயக்கத்துடன் யாரு என்று அவர் அருகில் வந்து பார்த்தாள் 
.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி செல்லம்" என்று பரிசை கொடுத்தார்.

"அம்மா" என்று அவர்களை கட்டிக் கொண்ட சுமதி கண்களில் பெருகியது கண்ணீர் இப்பொழுது அந்த பெண்ணின் கண்களிலும் கண்ணீர். 

"ஏன் அழுறிங்க அம்மா" என்று பதறினாள்.

அனாதையை முதியோர் இல்லத்தில் வாடிக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு அன்பான மகளும் மருமகனும் கிடைச்சத நினைச்சி ஆனந்த கண்ணீர் என்றார்கள்..

தன் கணவனை பெருமையோடு பார்த்தாள் அவள்.... 

---------------------------------------------முற்றும் -------------------------------------------

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அவளை போல் ஒருத்தி

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ    

 மார்கழிப் பனியில், பனியோடு பனியாக ஒரு அழகான தேவதையாய் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். வியப்போடும் மகிழ்ச்சியோடும் கண்களை சிமிட்டாமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். அவளும் வைத்த கண் வாங்காமல் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.ஒரு கணம் நடப்பது கனவா நிஜமா என்று புரியாமல் தன் தலையை சிலிப்பிக் கொண்டு அவளை பார்த்தான் விக்கி. அவள் அங்கு இல்லை. இவ்வளவு நேரம் அவள் நின்றிருந்த  எதிர் வீட்டு வாசலை பார்த்தான் அவள் அங்கு இல்லை இங்கு தானே இருந்தாள் இதற்குள் எப்படி மயமானாள் என்ற ஏக்கத்தோடு வெகு நேரம் அங்கேயே அவளின் வருகைக்காக  காத்திருந்தும் அவள் வராததால் ஏமாற்றம் கலந்த வருத்ததோடும், வாடிய முகத்தோடும் தன் வீட்டிற்குள்  நுழைந்தேன்.

             "விடிந்ததும் விடியாததுமா எங்கே டா போயிருந்தே விக்கி?வா வந்து இந்த பால் குடி" என்று சுதா பாலை வைத்துவிட்டு சமையலறைக்குள் பரபரபானாள்.பாலை குடித்துக் கொண்டே அவளை பற்றி யோசித்தான்.

அது அவள் தானா ? அவள்  என் நிம்மி தானா? இல்லை அவளாக இருக்க முடியாது.ஏன் முடியாது? அது அவளே தான்.அதே குழந்தை சிரிப்பு.அதே நிர்மலமான தெளிந்த நிரோடை போன்ற அழகிய முகம்.  புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட திராட்சை போன்ற கருவிழிகள்.நீர்வீழ்ச்சியை போல் அடர்த்தியான கூந்தல்.அதே எளிமை அது அவளே தான்.இல்லை அவளாக இருந்தால் ஏன் என்னை பார்த்தும்  ஓடிவரவில்லை?இப்படி அவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து அவனை திக்கு முக்காட செய்தன.

மகேஷிடம் சொல்லலாம் என்றால் அவனோ ஆபீசுக்கு செல்லும் அவசரத்தில் பரபரப்பாக இருந்தான்.இப்போ அவன்கிட்ட போனா திட்டினாலும் திட்டுவான் எதுக்கு வம்பு என்று அந்த எண்ணத்தை விட்டு விட்டு அமைதியாக இருந்தான்.ஆனால் அவள் நினைவுகள் அவனை விடுவதாக இல்லை.எதிர் வீட்டு வாசலில் மீண்டும் அவள் தென்படுவாலா? என ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

 "டேய் அங்கே என்ன பன்றே?" என்ற சுதாவின்  குரல் கேட்டு திடுக்கிட்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்து அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

"என்ன இவன் காலையிலிருந்து ஒரு மார்கமாக இருக்கிறான்?"என்று புலம்பிக் கொண்டே சென்றாள் சுதா .

அந்த அலமாரியில் ஒரு ஓரமாக அவளுடன் சேர்ந்து ஒரு கண்காட்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.அவளோடு ஜோடியாக எடுத்துக் கொண்ட ஒரே படம் அது தான்.அவளின் நினைவாக அவனிடம் இருப்பதும்  அந்த ஒரு புகைப்படம் தான்.ஒவ்வொரு முறை அவள் நினைவுகளில் அவன் திக்குமுக்காடும் பொழுது அந்த புகைப்படம் பார்த்து தான் ஆறுதல் அடைவான். இன்றும் அப்படி தான்.மனிதனின் கண்டுபிடிப்புகளில் அவனுக்கு மிகவும் பிடித்த  கண்டுபிடிப்பு புகைப்படம் தான், ஏனென்றால் அது அழிந்துவிட்ட உயிர்களை கூட அழியாமல் அடைகாக்கும் அற்புதமான ஒன்று.

அவனை அவள் பிரிந்து செல்லும் பொழுது அவனுள் விதைத்த அந்த  நேசம் மட்டும் காதல் விருக்ஷமாகி கசிந்து கொண்டிருந்தது.எத்தனை  எளிமையாக இருப்பாள்.அவளை அந்த கண்காட்சியில் தான் அவளை முதன்முதலில் பார்த்தான். வென்மேகமெல்லாம் ஒன்றாக திரண்டு அவள் மேனி ஆனது போல் அப்படி ஒரு கண்ணை பறிக்கும் வெண்மை.

அந்த கண்காட்சியில் அவளை ஒரு முறையாவது திரும்பி பார்க்காமல் சென்றவர் இல்லை என்றே சொல்லலாம் .அத்தனை அழகு,அறிவு இருந்தும் எந்த விதமான ஆரவாரமும் அலட்டலும் இல்லாமல் இருந்தது அவனை ஈர்த்தது. அவன் தன்னையே அறியாமல் அவள் காதலில் விழுந்தான்.அன்று அங்கு நடந்த அழகு போட்டியில் பெண்களுக்கான முதல் பரிசு  அவளுக்கும்  ஆண்களுக்கான முதல் பரிசு அவனுக்கும் கிடைத்தது. 

முதல் பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் அவன் மேடையில் சத்தமாக கத்தி ஆர்பாட்டம் செய்து அவன் தனது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.ஆனால் அவளோ எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக பரிசை பெற்றுக் கொண்டு என்னிடம் வந்து கை குலுக்கி வாழ்த்து சொன்னாள். பதிலுக்கு நானும் வாழ்த்துடன் காதலை சொன்ன போது வெட்கத்துடன் மௌனத்தை சம்மதமாக தெரிவிக்க என் உள்ளே 

" காதல் சொன்ன கணமே ...
காற்றாய் பறக்குது மனமே " என்ற பாடல் ஒலிக்க மனம் ஆயிரம் வாட் பல்பு போல் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.
அனைவரும் அவனுக்கு வாழ்த்து சொல்ல அவன் கண்கள் மட்டும் அவளையே தழுவிக் கொண்டிருந்தன.அவள் விழிகளும் அவ்வப்பொழுது அவனை வருடத்தான் செய்தன.

பிறகு விருந்தின்போது அவள் தன் குடும்பத்தை விட்டு விட்டு அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.அப்பொழுது அவர்களுக்குள் பூத்திருந்த காதல் அவர்கள் சொல்லாமலே புரிந்தது.  அவளின் அருகாமை அவனுக்குள் ஒருவித கிளிர்பை ஏற்படுத்தியது.அவளின் அழகை ரசித்துக் கொண்டே உணவை ருசித்தான்.விருந்திற்கு பிறகு அனைவரும் அவரவர் குடும்பத்துடன் விட்டுக்கு கிளாம்பினர்.அவன் தேவதையும் அவள் குடும்பதுடன் கிளம்பினாள்.அப்பொழுது அவள் விழிகள் ஈரமாவதை அவன் கவனிக்க தவறவில்லை.அவனை பிரிந்து செல்ல மனமில்லாமல் தன் காருக்குள் ஏறினாள். அதுவரை அமைதியாக இருந்த அவன் கார்  கிளம்பியதும் அவனும் அதனை பின் தொடர்ந்து ஓடினான். கார் சற்று தூரம் சென்று நின்றது. அவன் மகிழ்ச்சியுடன் நிற்க அவள் சட்டென்று ஜன்னல் வழியாக சாலையில் குதித்து அவனை நோக்கி ஓடி வர இவன் மனம் உற்சாகமாக துள்ளி குதிக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் அவன் திளைக்க  எதிரில் வந்த வாகனம் அவள் உடலை பதம் பார்க்க  இரத்த வெள்ளத்தில் சிதறிய மாமிசமாய் அவள் உடல் சாலையெங்கும் சிதறி துடிதுடிக்க அவன் புரண்டு புரண்டு அழுதான்.

கூடியிருந்த மக்கள் அனைவரும் வியப்பாய் வேடிக்கை பார்க்க அவனை சமாதான படுத்த முடியாமல் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஒருவருடத்திருக்கு மேல் பித்துபிடித்தவன் போல்  இருந்தவன் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வருகிறான்.

"டேய் விக்கி,இந்த உனக்கு பிடிச்ச கோழிக்கறி செய்திருக்கேன் வந்து சாப்பிடு?"என்றால் சுதா.

அவன் மீண்டும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால் என்ன அதிசயம்?அவள் அங்கே நின்று கொண்டு இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனால் நம்ப முடியவில்லை.அப்பொழுது அந்த பெண்மணி வெளியே வந்து 

"ஏய்,உள்ளே வா" என்றாள்.

அந்த பெண்மணியை பார்த்ததும் அவன் மேலும் திடுக்கிட்டான்.அன்று அவன் நிம்மியுடன்   பார்த்த அதே பெண் இப்பொழுது இவளுடனும்.என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றான்  என்  நிம்மி இறக்க வில்லையா? இல்லை அவள் என் கண்முன் தானே தன் உயிரை விட்டாள் .ஆம் இவள் அவள் இல்லை என்று அவனுக்கு நன்றாக புரிந்தது அப்படிஎன்றால் இவள் யார்???  இவள் நிம்மி இல்லையென்றால் யார்? அவளை போல் ஒருத்தியா ??? அது எப்படி சாத்தியம்?

குழப்பத்தின்  உச்சியில் தத்தளித்து கொண்டிருந்தான். 
  
சாப்பிடமல் இருந்த தட்டை பார்த்த சுதா "என்ன ஆச்சி இவனுக்கு காலையிலிருந்து ஒரு மாதிரி இருக்கான்.உடம்புக்கு ஏதாவது சரியில்லையோ என நினைத்துக் கொண்டே அப்படி என்ன தான் பார்க்கிறான் காலையிலிருந்து அந்த ஜன்னல ?"என்று எட்டிப் பார்த்தாள்.

எதிர்வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு வந்த பெண்மணி ஒரு அழகான பொமெரனியன் நாயுடன் வாக்கிங்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தாள்.

அதை பார்த்ததும் "ஓ இது தான் விஷயமா? நிம்மி நியாபகம் வந்திருச்சா ஐயாவுக்கு?"என்று அருகில் நின்றிருந்த நாயை தன் கைகளால் வருடினாள் சுதா.

"வா நாமும் அவங்களுடன் வாக்கிங் போகலாம்"என்றதும் துள்ளி எழுந்து வாலை ஆட்டிக் கொண்டு 'லொள் லொள்' என்று குறைத்துக் கொண்டே சுதாவுடன் கிளம்பியது விக்கி.

   
----------------------------------முற்றும்-----------------------












சனி, 25 ஜனவரி, 2014

மார்கழி பூவே



மலர்ந்தது மலர்ந்தது;
மார்கழி மலர்ந்தது;
கோலம் போடடடி பெண் மயிலே.

பூத்தது பூத்தது;
பூ ஒன்று பூத்தது;
பாரடி பூங்குயிலே.

தந்தது தந்தது ;
கிறிஸ்மஸ் தந்தது;
கொண்டாடிட வா சகியே.    

குளிருது குளிருது 
இதமாய் குளிருது;
ரசித்திட வா கவியே...




Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...