செவ்வாய், 26 அக்டோபர், 2021

அக்டோபர் 26

வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது.

1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார்.

1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார்.

1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார்.

1775 – அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார்.

1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்குப் பயணமானார்.

1859 – வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.

1863 – உலகின் மிகப் பழமையான காற்பந்துச் சங்கம் இலண்டனில் அமைக்கப்பட்டது.

1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.[1]

1905 – நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கீகரித்தது.

1909 – சப்பானியப் பிரதமர் ஈட்டோ இரொபூமி மஞ்சூரியா, கார்பின் தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1912 – முதலாம் பால்கன் போர்: உதுமானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தெசாலோனிக்கி நகரம் விடுவிக்கப்பட்டு கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது. இதே நாளில் செர்பியப் படைகள் ஸ்கோப்ஜே நகரைக் கைப்பற்றின.

1917 – முதலாம் உலகப் போர்: கப்பொரெட்டோ சமரில் இத்தாலியப் படைகள் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளுடன் மோதி பெரும் இழப்பை சந்தித்தன.

1917 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் செருமனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.

1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.

1936 – முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1947 – சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.

1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.

1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.

1958 – பான் அமெரிக்கன் ஏர்வேய்சு போயிங் 707 இன் முதலாவது வணிக-நோக்குப் பறப்பை நியூயோர்க் முதல் பாரிசு வரை மேற்கொண்டது.

1967 – முகம்மத் ரிசா பகுலவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.

1968 – சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.

1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.

1979 – தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1985 – ஆத்திரேலிய அரசு ஊலூரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.

1991 – யுகோசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியாவில் இருந்து விலகியது.

1994 – யோர்தானும் இசுரேலும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1994 – பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் பாதி சிக்காகி மால்ட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.

2000 – ஐவரி கோஸ்ட்டின் அரசுத்தலைவர் இராபர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரண்ட் பாக்போ தலைவரானார்.

2001 – ஐக்கிய அமெரிக்கா தேசப்பற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.

2002 – மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

2003 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

2015 – 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.

2016 – இத்தாலியின் நடுப்பகுதியை 6.6 அளவு நிலநடுக்கம் தாக்கியது.

பிறப்புகள்

1841 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1886)

1873 – ஏ. கே. பசுலுல் ஹக், வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 1962)

1883 – நெப்போலியன் ஹில், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1970)

1890 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி, இந்திய இதழியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1931)

1892 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (இ. 1950)

1902 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (இ. 1980)

1919 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானின் அரசுத்தலைவர் (இ. 1980)

1920 – சாரா இலீ இலிப்பின்கோட், அமெரிக்க வானியலாளர்

1923 – இராம் பிரகாசு குப்தா, இந்திய அரசியல்வாதி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் (இ. 2004)

1932 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடக முதலமைச்சர் (இ. 2011)

1933 – முருகேசு சுவாமிகள், ஈழத்து ஆன்மிகவாதி (இ. 2007)

1947 – இலரி கிளின்டன், அமெரிக்க அரசியல்வாதி

1947 – சாருமதி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1998)

1952 – லார்ஸ் பீட்டர் ஹான்சென், அமெரிக்கப் பொருளியலாளர்

1959 – ஏவோ மொராலெஸ், பொலிவியாவின் 80வது அரசுத்தலைவர்

1965 – மனோ, தென்னிந்தியத் திரைப்பட பாடகர்

1974 – ரவீணா டாண்டன், இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்

1985 – அசின் (நடிகை), தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1991 – அமலா பால், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

899 – ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849)

1764 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)

1879 – அ. சந்திரசேகர பண்டிதர், மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞர்

1930 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிசு மருத்துவர் (பி. 1860)

1957 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (பி. 1896)

1974 – மிர்துலா சாராபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)

2013 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர் (பி. 1927)

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...