- கோவில் உண்டியலுக்கு செலுத்தினால் காணிக்கை
- யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை
- அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை
- கல்விக் கூடங்களில் கட்டணம்
- திருமணத்தில் ஸ்ரீதனம்
- திருமண விலக்கில் ஜீவனாம்சம்
- விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு
- இன்சூரன்ஸ் செலுத்தினால் காப்பீடு
- வங்கிகளில் வைத்தால் வைப்புத்தொகை
- ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம்
- நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் தானம்
- திருமண வீடுகளில் பரிசாக மொய்
- திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது கடன்
- திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு
- விரும்பிக் கொடுத்தால் நன்கொடை
- நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம்
- அரசுக்குச் செலுத்தினால் வரி
- அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி
- செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம்
- தினமும் கிடைப்பது கூலி
- பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம்
- சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம்
- கடன் வாங்கினால் அத்தொகைக்கு அசல்
- வாங்கியக் கடனுடன் கொடுக்கும் போது வட்டி
- தொழில் தொடங்கும் போது முதலீடு
- தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம்
- குருவிற்குக் கொடுக்கும் போது குருதட்சணை
- ஹோட்டலில் நல்குவது டிப்ஸ்
இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்த பணம் என்ற காகிதத்தைப் பெற...
- சிலர் அன்பை இழக்கின்றனர்.
- சிலர் பண்பை இழக்கின்றனர்.
- சிலர் நட்பை இழக்கின்றனர்.
- சிலர் உறவுகளை இழக்கின்றனர்.
- சிலர் கற்பை இழக்கின்றனர்.
- சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
- சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்.
- சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
- பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக