ஞாயிறு, 21 ஜூலை, 2013

வீட்டுக் குறிப்புகள்


எழுதியவர் பிரபாவதி.கோ 

1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.

2. சாதம் வெள்ளை வெளே ரென்று  இருக்க  அரிசி களைந்து  வைக்கும் போது அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை பிழிய வேண்டும்.

3. உண்மையான தேன் என்றால் ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமலும் , பரவாமலும் அப்படியே நிற்கும்.

4. வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியைஏற்றிக் கொண்டு வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.  

5. கிழங்குகளை உப்பு நீரில் ஊற வைத்து பிறகு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

6. மருதாணி போடும் போடு வெறும் தண்ணிரை ஊற்ற கூடாது.நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு கையால் நன்றாக பிசிறினால் தண்ணீர் வழவழபாகி விடும்.அந்த தண்ணீரை மருதாணி பவுடரில் கலக்கினால் சீக்கிரம் உதிராமல் நல்ல கலராக வரும்.

7. நீரில் சிறிது வினிகரை கலந்து பாத்திரங்களை கழுவினால் பளிசிசென்று இருப்பதுடன் கைகளும் மென்மையாக இருக்கும்.

8. கல் உப்பை ஒரு கைபிடியளவு மிக்சியில் அரைத்தால் பிளேடு கூர்மையாகும்.

9. பட்டு துணிகளை உப்பு கலந்த நீரில் அலசினால் வண்ணம் பாதுகாப்பதுடன் துணியும் மிருதுவாக இருக்கும்.

10. குலோப் ஜாமூன் செய்யும் போது சிறிதளவு வெண்ணை சேர்த்தால் ஜாமூன் மிருதுவாக வரும்.

11. தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காய் துருவலுடன் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் சிறிது நேரம் ஓடவிட்டால் பர்பி வெள்ளையாக வரும்.

12. ஊறுகாய்க்கு கல் உப்பை பொடித்து போட்டால் கெடாது.

13. வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது அதனுடன் சிறிது சிரகம்,தேங்காய் துருவலை வறுத்து பொடி செய்து சேர்த்தால் பொரியல் மணமாய் ருசியாக இருக்கும்.

14. காய வைத்த வேப்பிலையை அரிசியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.

15. பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் எவ்வளவு நேரமானாலும் கெடாது.

16. தேங்காயை துறுவி வெயிலில் காய வைத்தால் வேண்டிய போது உபயோகிக்கலாம் .

17. அடைக்கு அறைக்கும் போது காய்ந்த மிளகாயை போட்டு பின் பச்சை மிளகாயை போட வேண்டும்.

18. புளியை உப்பு சேர்த்து கரைத்தால் புளிப்பு சுவை நன்றாக இருக்கும்.

19. ஒரு துண்டு இஞ்சி சேர்த்து சட்னி செய்தால் சுவை கூடும்.

20. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இனிப்பு பண்டங்கள் செய்தால் ருசி கூடும்.

21. கத்தியில் சிறிது எலுமிச்சை சாற்றை தடவி கொண்டு ஆப்பிள்,வாழைக்காயை நறுக்கினால் கருக்காது.

22. தக்காளியை தினமும் சாப்பிட்டால், சருமம் இளமையாக இருக்கும்.

23. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமர்ந்தால் அது  உண்மையான தேன்.

24. வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் ஊற வைத்து  பின் அதனை வெட்டனால் கண்ணீர் வராமல் இருக்கும்.

25. வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடம் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

26. வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால்
கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.   .

27. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து,நறுக்கினா
ல் அழுவதைத் தடுக்கலாம்.

28. கிழங்குகள் வெந்த பின் தான் உப்பு சேர்க்க வேண்டும்.

29. கிழங்குகளை அரிசி கழுவிய நீரில் வேக வைத்தால் சீக்கிரம் வேகும்.

30.ஊறுகாயில் ஒரு சிட்டிகை சோடியம் பென்சொயிடு போட்டு வைத்தால் கெடாது.

31.தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம்.

32. ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு பருப்பை வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

33. சப்பாத்தி செய்யும் போது சிறிது மைதா சேர்த்து கொண்டால் சப்பாத்தி உப்பும்.

34.சாம்பாரில் உப்பு அதிகமானால் உருளை கிழக்கை வெட்டிப் போடவும்.

35. சோம்பு,பிடிகரனை ஆகியவற்றை இட்லி தட்டில் வேக வைத்தால் குழையாது.

36. குலோப் ஜமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் உறையாமலும் கேட்டுப் போகாமலும் இருக்கும்.

37. நமுத்துப் போய் விட்ட  பாண்டங்களை சூடான வெறும் வாணலியில் போட்டு எடுத்தால் முறுமுறுப்பாகி விடும்.

38. பிசைந்த சப்பாத்திமாவுடன் தோல் சீவிய ஒரு உருளை கிழங்கை போட்டு வைத்தால் கெடாது.

39. பிசைந்த சப்பாத்தி மாவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் அதன் மேல் பூசி வைத்தால் மாவு கெடாது.

40. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.
 

41. பில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையை போட்டால் துளை அடைத்துக் கொள்ளாது.

43. நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.



44. கையில் நல்லெண்ணெய் தடவி கொண்டு சேனை கிழங்கை நறுக்கினால் அரிக்காது.

45. வயிற்றுப்போக்குஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம்.

46. மைசூர்பாக் செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

47. வாழைக்காய்,கத்தரிக் காயை அரிந்ததும் உப்பு தண்ணீரில் போட்டால் கருக்காது.

48. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காது.

49. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

50. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

51. மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

52. பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி  போட்டு வைக்கலாம்.

53. கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
 

54. பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.


55. புளிக்கரைசலை ஐஸ்டிரேயில் ஊற்றி ப்பிரிட்ஜில் ப்பிரீசரில் வைத்து தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்.

57. தாகம்  எடுக்கும் போது பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
  

58. நறுக்கிய ஆப்பிள்,பேரிக்கையை உப்பு நீரில் போட்டால் கருக்காது.

59. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

60. சமையல்  செய்யும் போதே உப்பு  போட்டு விட்டால் சுவை நன்றாக இருக்கும்.

61. முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

62. தேங்காய் துருவலை பாலிதீன் பையில் போட்டு ப்பிரீசரில் வைத்தால் சில நாட்கள் வரை கெடாது.

63. கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு எடுத்தால் தோல் எளிதாக உரியும்.

64. பல்லிகளை விரட்ட மயில் இறகை சுவரில் ஒட்டவும்.

65. நக போலிஷ் கெட்டியாகி விட்டால் அசிடோன் சில சொட்டுக்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

66. ரவையில் பூச்சி பிடிக்காமல் இருக்க லேசாக வறுத்து வைக்கவும்.

67. சுவரில் உள்ள சுண்ணாம்பு உதிரிந்து விட்டால் சிறிதளவு டூத்பேஸ்டு தடவவும்.

68. இரவில் தூங்குமுன் கண்ணில் சில சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.

69. எறும்புகள் வராமல் இருக்க படிகாரத்தூள் தூவி விடவும்.

70. செடிகளில் பூச்சிகள் இருந்தால் சாம்பலை தெளித்தால் போய் விடும்.

71. முட்டை ஓடுகளை தூக்கி எறியாமல் அதன் மீது ஸ்கெட்ச் பேனாவால் படம் வரைந்து சுவரில் மாட்டினால் பல்லிகள் வராது,அலங்காரமாகவும் இருக்கும்.

72. உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

73. தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடித்தால் குரல் வளம் பெரும்.

74. கண் எறிச்சல் தீர கண்களின் மேல் மல்லிகைப் பூக்களை வைத்து கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் குறையும்.

75. பட்சணங்களை சுடும் போது எண்ணெய் அதிகம் செலவாகாமல் இருக்க ஒரு கோலி குண்டு அளவு புளியை கொதிக்கும் எண்ணெய்யில் போடவும்.

76. பூண்டை தோல் உரிக்க பரிஜ்ஜில் வைத்து எடுத்து உரிக்கவும்.

77. தொலைபேசியை ஒரு சொட்டு 'சென்ட்'ஆல் துடைத்தால் வாசனையாக இருக்கும்.

78. துணிகளை ஊற வைக்கும் போது கலியன சாம்பூ கவர்களை போட்டு ஊற வைத்தால் துணிகள் நல்ல வாசனையுடன் இருக்கும்.

79. காலணி (ஷு ) நனைந்து விட்டால் செய்திதாளை அதனுள் நன்றாக திணித்து வைத்தால் ஈரத்தை செய்திதாள் ஊறிஞ்சிவிடும்.

80. ஷு ' மீது பழைய ஆயிண்டுமெண்டை தடவி பிறகு அதன் மேல் பாலிஷ் செய்தால் பளபளப்பாக இருக்கும்.

81. ஏர் கூலரில் சில சொட்டுகள் பர்ப்யூம் ஊற்றினால் குளிர்ந்த காற்றுடன் நல்ல நறுமானமும் வீசும்.

82.விபூதியால் பித்தளை பொருட்களை தேய்த்தால் பளபளப்பாகும்.

83. சேனைக் கிழங்கை தோல் எடுத்த பிறகே வேக வைக்க வேண்டும.





சனி, 20 ஜூலை, 2013

நிஜம்

நேற்று உன்னோடு
வாழ்ந்தேன் நிஜமாக
இன்று உன் நினைவுகளோடு
வாழ்கிறேன் சுகமாக

நேற்றைய நிஜம்
இன்றைய நினைவு

நிலையற்ற நிஜம்  தந்த
அழிவற்ற  நினைவுகளை

அடைகாத்து  மகிழ்கின்றேன்
அனுதினமும் சேமிக்கிறேன்



வெள்ளி, 19 ஜூலை, 2013

காதல்


பட்டம் வாங்கிட
கல்லூரியில்
காலடி வைத்தேன்
விழுந்தது என்னவோ
புதைகுழியில்....

மழை


இயற்கை எய்திய
வாலிபகவி வாலிக்கு 
இயற்கையின்
கண்ணீர் அஞ்சலி

கட்டை

உன் கட்டை எரிய
உடன் கட்டை ஏறுகிறது
மரக்கட்டை



செவ்வாய், 9 ஜூலை, 2013

அழகு குறிப்புகள் - II

  • கை நகங்களை நீளமாக வளர கைகளில் ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும் .
  • துளசி இலைகளை கையால் நசுக்கி அதன் சாற்றை பூசினால் முகப்பரு.
  • வியர்க்குறு தொல்லை தீர சந்தனத்தை அரைத்து தடவவும்.உடல் குளிர்ச்சி அடையும்.
  • பாலாடையை உதட்டில் தடவி வர உதடுகள் அழகுடன் மிளிரும்.
  • கண்கள் சோர்வடையும் போது மல்லிகை பூக்களை கண்களுக்கு மேல் கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் சோர்வு நீங்கும்.
  • கடுகு எண்ணெயால் மசாஜ் செய்தால் தொப்பை குறையும்.
  • பட்டு போன்ற கைகளுக்கு தினமும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்யவும்.
  • முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவிய பின் மேக்கப் செய்து கொண்டால் நீண்ட நேரம் மேக்கப் களையாமல் இருக்கும்.
  • இரவில் தூங்கும் முன் கண்களில் ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.
  • கஸ்துரி மஞ்சள் அரைத்து பூசி வர சருமம் மிளிரும்.
  • மருதாணி போடுவதற்கு முன் கையில் ஏதாவது ஒரு தலைவலி பாமை தடவிக் கொண்டால் மருதாணி நன்றாக சிவக்கும்.
  • சூடான தவாவில் ஒரு கிராம்பு போட்டு அதன் மேல் ஒரு சொட்டு எண்ணெய்  விட்டு அந்த சூட்டில் மருதாணி இட்ட கைகளை காட்டினால் மருதாணி நன்றாக சிவக்கும்.

பாட்டி வைத்தியம்

  •  நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 
  • தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 
  • தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 
  • தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 
  • வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
  • உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
  • அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 
  • குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
  • வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 
  • வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
  •  மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
  • மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
  • பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
  • மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
  • சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
  • தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
  • மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
  • தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
  • மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
  • வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
  • நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.
  • பல் சொத்தைக்கு சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
  • உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
  • வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
  • கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
  • வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
  • உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
  • கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
  • கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
  • உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.
  • இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
  • உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
  • வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
  • ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
  • மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
  • 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
  • தேமல் இருந்தால்  சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
  • மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
  • மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.
  • தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
  • முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும். 
  • தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்

திங்கள், 8 ஜூலை, 2013

குப்பை தொட்டியாய் மாறிய சமூக நலக் கூடம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம் எம் டி  எ காலனியில் மெயின் ரோட்டில் உள்ளது இந்த சமூக நலக் கூடம்.

சமூக நலக் கூடம்
பத்து வருடங்களுக்கு முன் இங்கு நடக்காத திருமணம் இல்லை.வெறும் திருமணங்கள் மட்டும் இல்லை நிச்சய தார்த்தம்,பிறந்த நாள் விழா,பள்ளி ஆண்டு விழா என மேலும் பல வகையான சமுக நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றிருக்கின்றன .



குப்பைகளின் குவியல்

ஏதோ சில காரணங்களுக்காகஅரசாங்கம் இதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டதால்,இந்த சமுக நலக் கூடம் பூட்டப் பட்டது.


அன்று முதல் இந்த இடத்தை பொது மக்கள் குப்பைகளை கொட்டவும்,தங்கள் வீடு இடிபாடுகளை கொட்டவும் இந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள்.






பின்புறம் 
சிலர் சிறுநீர் கழிக்கவும்,சிலர் இரவில் மது பாட்டில்கள் கொண்டு வந்து மது அருந்தவும் மேலும் சிலர் புகை பிடிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.


அருகில் வசிப்பவர்கள் யாராவது தட்டி கேட்டால் எது என்ன உங்க சொத்தா என்று கேட்கிறார்கள்.
Debris along with Garbages

Community hall back side view
இங்கே நாய்களும் பூனைகளும் குட்டி போட்டு இனபெருக்கம் செய்கின்றன.இவற்றோடு போட்டி போட்டு கொண்டு கொசுக்களும் பெருகி வருகின்றன.
Using it for Parking



அரசாங்கம் எதாவது நடவடிக்கை எடுக்கும் என்று பலமுறை புகார் கொடுத்ததும் இது வரை எந்த பலனும் இல்லை.

Fenced by residents
இங்கே சேர்ந்து இருக்கும் குப்பையால் கொசுக்கள் பெருகி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.
குப்பைமேடாகி போன சமுக நலக் கூடம் 
பொது மக்கள் அதிகமாக வந்து இங்கு சிறுநீர் கழிப்பதால் அங்கு ஒரே துர்நாற்றம் வீசுகிறது.இது அருகில் வசிப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.

இதை தடுக்க அங்கு வசிப்பவர்கள் வேலி அமைத்தும் எந்த பயனும் இல்லை.ஓரிரு நாட்களில் அதை உடைத்துக் கொண்டு மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள்.

சிறுநீர் கழிக்கும் ஒருவர் 











விலங்கு கழிவுகளுடன் குப்பைகளும் சேர்ந்து துர்நாற்றம் விசுவதுடன் நோய் ஏற்படவும் ஆபாயம் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் மிகுந்த அட்சம் அடைகிறார்கள்.
He is using it as a open toilet
பத்திரிகை துறையாவது எதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் பல முறை பத்திரிகையில் இந்த இடத்தின் நிலையை வெளியிட்டு இருந்தாலும் அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ அதை பற்றி கவலை படுவதாக இல்லை.


A CLOSE UP
அரசாங்கம் கூடிய விரைவில் இந்த பிரச்சணையை தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர் பாப்போம்....

புதன், 3 ஜூலை, 2013

மைல்கல்லின் ரகசியம்

 சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல… இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க…

* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை

* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை

* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை

* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

திங்கள், 1 ஜூலை, 2013

வீட்டுக் குறிப்புகள்


1.தயிர் புளித்து விடாமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால்  தயிர் புளிக்காது.

2.வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய்  தடவி சற்று நேரம் வெயிலில் காய வைத்து பின் முறத்தில் போட்டு புடைத்தால் தோல்  அகன்று விடும்.


3.நறுக்கிய வாழைக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.

4.உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முட்டைகோஸ்,காலிபிளவர் ஆகியவற்றை போட்டு வைத்தால் அதிலுள்ள சிறு பூச்சிகள் இறந்து நீரில் மிதக்கும்.

5.தேனீர் போட நீரையும் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையாக இருக்கும்.

6.நறுக்கிய கத்திரிக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.

7.கடலை பருப்பில் கடுகு எண்ணெய்  சிறிது கலந்து காய வைத்தால் கெடாது.

8.சாம்பார் ,மோர்குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் போது  ஒரு மேஜைகரண்டி  அரிசி மாவை சேர்த்து  உருட்டினால் கரைந்து போகாது.

9.தோசை மாவு புளித்து விட்டால் ஒரு டம்ளர் பால் கலந்தால் புளிப்பை போக்கி விடும்.

10.தோசை மாவுடன் ஒரு கரண்டி அரிசி மாவு கலந்தால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...