புதன், 11 டிசம்பர், 2024

This year in six words

 

 




(This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogchatter.com/campaign-registrations/are-you-ready-to-wrap-up-2024-with-a-bang

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பாரதி


முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்!


வறுமை சூழ்நிலை எனினும்,
தன்மானம் இழக்கா 
புரட்சிக் கவிஞன்! 

தாழ்த்தப்பட்டவர்களை
வீட்டில் சேர்த்ததால், 
சுற்றத்தாரால் தள்ளி
வைக்கப்பட்ட போது!
அவர்கள் யார் 
என்னை தள்ளிவைக்க! 
அவர்களை நான் தள்ளி வைக்கிறேன் என்று சொன்ன 
சுதந்திர கவிஞன்! 

பாருக்குள்ளே நல்ல நாடு 
என்று பாடி வைத்த 
தேசக் கவிஞன்! 

தமிழை துச்சமாய் 
எண்ணிய
கூட்டத்தில்
நீ தமிழ் 
அமுதம் பருகிய
தமிழ்க் கவிஞன்!

வ. உ .சிதம்பரம், 
சுப்ரமணிய சிவா 
இருவருடன் பயணித்த 
உணர்ச்சிக் கவிஞன்! 

பெண்களை
அடிமை படுத்தி தள்ளி வைத்த காலத்தில்,
மனைவி செல்லம்மா
தோளில் கை போட்டு
சாலையில் நடந்த 
சமதர்ம கவிஞன்! 

காந்தியை மகாத்மா என்று அழைத்த காலத்தில்,
மிஸ்டர் காந்தி என்று அழைத்த 
எதார்த்த கவிஞன்!

ஆஹா என்று எழுந்தது பார் 
யுக புரட்சி!
என்று ரஷ்ய புரட்சியை
பாடி வைத்த 
சோசலிச கவிஞன்!

குழந்தைகளை பெற்றோர்கள் 
படி, படி, படி என்று சொல்லும் 
இன்றைய சூழலில் 
மாலை முழுவதும் விளையாட்டு என்று 
பாடி வைத்த 
குழந்தை கவிஞன்!

தன் கண் எதிரே 
காசியில் நடந்த 
தவற்றைப் பார்த்து 
கொதித்து எழுந்து 
தன் அடையாளத்தை 
தூக்கி எறிந்த 
தைரிய கவிஞன்! 

நல்லோர்களை, 
தியாகிகளை, 
மாமனிதர்களை 
உயிரோடு இருக்கும்போது அவர்களை கவனியாமல் 
இருப்பதும்,
அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு சிலை வைத்து வணங்குவதும் 
தமிழர்களின் வழக்கம் அல்லவா? 
உனக்கு மட்டும் என்ன அதில் விதிவிலக்கா? 
ஆம் !
நீ உயிருடன் இருந்தபோது 
உன்னை காணாது
விட்டு விட்டோம்! 
நீ இறந்த பிறகு உனக்கு 
சிலை வைத்தோம்!
நீ சென்னையில்தான்
 உயிர் விட்டாய்! 
அந்த இறுதி நிகழ்ச்சியில் 
வெறும் ஏழு பேர் மட்டும் 
கலந்துகொண்டார்களாம்?
அதில், 
உன் கவிதை ரசிகை 
ஆங்கிலேய பெண்
ஒருவரும் தானாம்?
அந்தப் பெண்ணுக்கு இருந்த உணர்வு கூட, 
எங்கள் முன்னோருக்கு இல்லையே?
நீ மாண்டு விட்டாய்! 
ஆனால் உன் கவிதை 
அப்படியல்ல!!




வியாழன், 19 செப்டம்பர், 2024

அழகான பாட்டில் விளக்கு

வணக்கம் நண்பர்களே,


இன்று ஒரு அழகிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது ஒரு அழகான பாட்டில் விளக்கு தான். அதை எப்படி செய்வது என்று இப்பொழுது பார்க்கலாமா???????? ஒரு பழைய பாட்டில எடுத்துக் கொள்ளவும் அதன் மீது டிஸ்யூ காகிதத்தை பசையின் உதவியுடன்  ஒட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அது நன்றாக காய்ந்ததும், அதன் மீது பென்சிலைக் கொண்டு வரைய வேண்டும். பின்பு வண்ணங்களை பூசிக்கொள்ள வேண்டும். இறுதியில் கார்க் கார்  விளக்கை பொருத்தினால் அழகான பாட்டில் விளக்கு தயார்.

 மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். நீங்களும் இதே போல் தயார் செய்து உங்கள் வீட்டையும் அழகாக அலங்கரித்துக் கொள்ளவும்.




செவ்வாய், 16 ஜூலை, 2024

பிளாஸ்டிக் பாட்டில் செய்த பூந்தொட்டி


 காலை வணக்கம் நண்பர்களே.... அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? நான் நலமாக இருக்கிறேன்.

பழைய பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து ஒரு அழகான வீட்டு உபயோக பொருள் எப்படி தயார் செய்வது என்பதை இன்றைய பதிவில் காணலாம்..

ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய இரண்டு துண்டுகளையும் தலைகீழாக பொருத்திக் கொள்ளலாம். இப்பொழுது அது பார்ப்பதற்கு ஒரு கோப்பை போன்று காட்சி அளிக்கும். இரண்டு துண்டுகளையும் நன்றாக இணைத்துக் கொள்ளவும். இப்பொழுது அதன்மீது டிஷ்யூ காகிதத்தை எடுத்து பசை தடவி நன்றாக பாட்டில் தெரியாத அளவுக்கு ஒட்டிக் கொள்ளவும். நன்றாக பசை தடவி காகிதத்தை ஒட்டியவுடன் அதை காய விட வேண்டும். பாட்டில் நன்றாக காய்ந்தவுடன் அதன் மீது வெள்ளை சுண்ணாம்பு நன்றாக தடவிக் கொள்ள வேண்டும் .பாட்டில் நன்றாக காய்ந்ததும் நாம் அந்த பாட்டிலின் மேல் பகுதியை கண், காது, மூக்கு ஆகியவற்றை செய்து ஒட்ட வேண்டும் இப்படி ஒட்டிய பிறகு அதற்கு வண்ணம் பூசி தயார் செய்து கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு அழகான பூந்தொட்டி நமக்கு தயாராகி விட்டது இதனை மேஜை மேல் அலங்கார பொருளாக வைத்துக் கொள்ளலாம். இதன் செய்முறையை  வீடியோ பதிவில் தெளிவாக காணலாம் மீண்டும் ஒரு புதிய பதிவில் உங்களை சந்திக்கிறேன்.




திங்கள், 15 ஜூலை, 2024

கடல் பசு

           கடல் பசு  என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும். கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் உள்ள கடற்பசு கிட்டத்தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது. கடல் பசுவின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் எடை 60 பவுண்ட். இவை நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. அதற்குக் காரணம் இவை அதிகமாக வேட்டையாடப்படுவதே ஆகும்.


    இவை பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன கடல் பசுவின் இறைச்சி சுவை மிக்கதாக இருப்பதால் சந்தையில் இதற்கு அதிகமாக வரவேற்பு உள்ளது.
இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முறிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது.

    கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு ஆகும். கடலில் மீன் பிடி பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் இவற்றை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கிறார்கள். கடல் பாசிகளையும், கடலுக்கு அடியில் காணப்படும் நீர் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து கடல் பசு ஒரு பெரிய ஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம். கடல் பசு இறைச்சிக்காகவும், தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

       கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும். இவை பார்ப்பதற்கு டால்பின்கள் போல் இருந்தாலும் இவற்றிற்கு முதுகுத்துடுப்பு இல்லை, இதனால் இது தண்ணீருக்கு வெளியே தாவும் திறனற்றது.

இப்படிப்பட்ட அரிய வகை உயிரினங்களை காப்போம். இந்த உலகில் நாம் மட்டும் வாழவில்லை இப்படிப்பட்ட அற்புதமான மருத்துவ குணம் படைத்த அறிய வகை உயிரினங்களும் இந்த உலகில் வாழ்கின்றன என்பதை நம் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்போம் அவர்களும் இந்த உயிரினங்களை பற்றி அறிந்து கொள்ளவும் அவற்றின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்வோம்

திங்கள், 6 நவம்பர், 2023

Figurative Painting

 Heloo friends

welcome to my blog.

Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work and let me know the pros and cons in the comment section.

Here is a beautiful figurative painting that i would like to share with you all.

for making this beautiful painting we need the following materials:

canvas

acrylic paint

brushes

How to draw:

we need very few colors to do this beautiful painting.

to learn this beautiful textured figurative painting click on the below picture or click Prabha on wheels




வியாழன், 12 அக்டோபர், 2023

தமிழனின் பெருமை

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்தான் தமிழன்

கோதுமை
நெல்
துவரை 
பாசிப்பயறு
கொண்டைக்கடலை
மொச்சை 
எள் 
உளுந்து 
கொள்ளு

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான் 

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 
இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் 
சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு 
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் 
நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி (மலைப்பகுதி) 
முல்லை ( வனப்பகுதி) 
நெய்தல் ( கடல் பகுதி) 
மருதம் ( நீர் மற்றும் நிலம்) 
பாலை ( வறண்ட பகுதி) 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்
வாடை 
கோடை 
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல் 

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை 

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் ( இயற் தமிழ் ) 
இசை ( இசைத்தமிழ்) 
நாடகம் ( நாடகத்தமிழ்) 

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 
புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 
புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

அதை... 
உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான்  வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

"ஒழுக்கம் விழுப்பந் தரலான்"
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

புதன், 27 செப்டம்பர், 2023

தமிழின் அழகு


1.வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - மந்திரம்

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - தந்திரம்

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - இசை

4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - கடாக்ஷம்

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - யோகா

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்

7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அது - பிராணாயாமம்

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - குண்டலினி

9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர்   கோவில் 

10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - குடும்பம்

11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - அன்பு

12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - பக்தி

சனி, 23 செப்டம்பர், 2023

திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

இந்நேராய்வில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.11.2023-ஆம் நாளுக்குள் அளிக்கலாம்.

புதன், 5 ஜூலை, 2023

நகரத்து காக்கா

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. துபாயிலிருந்து திரும்பிய வடிவேலு மாதிரி அதன் அலட்டல் தாங்க முடியலை!

''எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்...'' என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா.

'பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்' என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா.

''நான் சொன்ன மாதிரி எவ்வளவு கட்டடம் இருக்குன்னு பார்த்தியா... இதெல்லாம் மனுசங்க வாழ்றது...''என்றது நகரத்து காக்கா.

''ஆமாமா... பார்த்தேன். ஆனா, நாம வாழறதுக்கு இங்கே மரங்களையே காணோமே...''என்றது கிராமத்து காக்கா.
நகரத்து காக்கா உடனே பேச்சை மாற்றியது. ''கீழே பாரு... எவ்வளவு வாகனம் போகுது...''

''வாகனத்தை விடு. ஆளுங்களைப் பாரு... கரும் புகை அடிச்சு அடிச்சு சீக்கிரமே நம்ம கலருக்கு மாறி காக்காவா ஆயிடப் போறாங்க!'' என்று 'கமெண்ட்' அடித்தது கிராமத்து காக்கா.

நகரத்து காக்கா என்ன சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே, ''உடம்பெல்லாம் புழுதி படிஞ்சு ஒரே 'கச... கச...'ன்னு இருக்கு. குளிக்கணும்... ஆத்துக்கு கூட்டிட்டு போ...'' என்றது கிராமத்து காக்கா.
ஆற்றை நெருங்க நெருங்க நாற்றம் அதிகரித்தது.
''ஆத்துலே குளிக்கணும்னு சொன்னா... இங்கே கூட்டிட்டு வந்து சாக்கடையை காட்டுறே...?'' என்றது கிராமத்து காக்கா.

''இந்த ஊருல இதுதான் ஆறு!''
''ஆறா...? இதுல எங்க ஊரு பன்னிக்குட்டி கூட குளிக்காது. ஆமா நீ எப்படி குளிக்கிறே?''
நகரத்து காக்கா தயங்கியவாறே சொன்னது...
''மழை பெய்யும்போதுதான் குளிப்பேன்...''
''அதுதான் உன் மேல் இவ்வளவு நாத்தமா?'' என்று முகம் சுளித்தது கிராமத்து காக்கா.

''சரி, வா கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது சாப்பிடுவோம்'' என்றது நகரத்து காக்கா.
''சாப்பிடுறதுக்காக எதுக்கு கடைத்தெருவுக்குப் போகணும்'' என்று ஆச்சர்யமாக கேட்டது கிராமத்து காக்கா.
''திருடி திங்கத்தான்''என்றது நகரத்து காக்கா.

''என்னது... திருடி திங்கவா...? கிராமத்துல 'கா...கா...'ன்னு கூப்பிட்டு சாப்பாடு போடுறாங்க. இங்கே திருட்டு பிழைப்பா இருக்கே! ச்சீ... ச்சீ... எனக்கு வேண்டாம்.

நான் கிராமத்துக்கே திரும்பப் போறேன். அங்கே கௌரவமாகவும், நிம்மதியாகவும் வாழலாம்'' என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது கிராமத்து காக்கா. அதை அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தது நகரத்து காக்கா!

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...