புதன், 11 டிசம்பர், 2024

This year in six words

 

 




(This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogchatter.com/campaign-registrations/are-you-ready-to-wrap-up-2024-with-a-bang

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பாரதி


முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்!


வறுமை சூழ்நிலை எனினும்,
தன்மானம் இழக்கா 
புரட்சிக் கவிஞன்! 

தாழ்த்தப்பட்டவர்களை
வீட்டில் சேர்த்ததால், 
சுற்றத்தாரால் தள்ளி
வைக்கப்பட்ட போது!
அவர்கள் யார் 
என்னை தள்ளிவைக்க! 
அவர்களை நான் தள்ளி வைக்கிறேன் என்று சொன்ன 
சுதந்திர கவிஞன்! 

பாருக்குள்ளே நல்ல நாடு 
என்று பாடி வைத்த 
தேசக் கவிஞன்! 

தமிழை துச்சமாய் 
எண்ணிய
கூட்டத்தில்
நீ தமிழ் 
அமுதம் பருகிய
தமிழ்க் கவிஞன்!

வ. உ .சிதம்பரம், 
சுப்ரமணிய சிவா 
இருவருடன் பயணித்த 
உணர்ச்சிக் கவிஞன்! 

பெண்களை
அடிமை படுத்தி தள்ளி வைத்த காலத்தில்,
மனைவி செல்லம்மா
தோளில் கை போட்டு
சாலையில் நடந்த 
சமதர்ம கவிஞன்! 

காந்தியை மகாத்மா என்று அழைத்த காலத்தில்,
மிஸ்டர் காந்தி என்று அழைத்த 
எதார்த்த கவிஞன்!

ஆஹா என்று எழுந்தது பார் 
யுக புரட்சி!
என்று ரஷ்ய புரட்சியை
பாடி வைத்த 
சோசலிச கவிஞன்!

குழந்தைகளை பெற்றோர்கள் 
படி, படி, படி என்று சொல்லும் 
இன்றைய சூழலில் 
மாலை முழுவதும் விளையாட்டு என்று 
பாடி வைத்த 
குழந்தை கவிஞன்!

தன் கண் எதிரே 
காசியில் நடந்த 
தவற்றைப் பார்த்து 
கொதித்து எழுந்து 
தன் அடையாளத்தை 
தூக்கி எறிந்த 
தைரிய கவிஞன்! 

நல்லோர்களை, 
தியாகிகளை, 
மாமனிதர்களை 
உயிரோடு இருக்கும்போது அவர்களை கவனியாமல் 
இருப்பதும்,
அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு சிலை வைத்து வணங்குவதும் 
தமிழர்களின் வழக்கம் அல்லவா? 
உனக்கு மட்டும் என்ன அதில் விதிவிலக்கா? 
ஆம் !
நீ உயிருடன் இருந்தபோது 
உன்னை காணாது
விட்டு விட்டோம்! 
நீ இறந்த பிறகு உனக்கு 
சிலை வைத்தோம்!
நீ சென்னையில்தான்
 உயிர் விட்டாய்! 
அந்த இறுதி நிகழ்ச்சியில் 
வெறும் ஏழு பேர் மட்டும் 
கலந்துகொண்டார்களாம்?
அதில், 
உன் கவிதை ரசிகை 
ஆங்கிலேய பெண்
ஒருவரும் தானாம்?
அந்தப் பெண்ணுக்கு இருந்த உணர்வு கூட, 
எங்கள் முன்னோருக்கு இல்லையே?
நீ மாண்டு விட்டாய்! 
ஆனால் உன் கவிதை 
அப்படியல்ல!!




வியாழன், 19 செப்டம்பர், 2024

அழகான பாட்டில் விளக்கு

வணக்கம் நண்பர்களே,


இன்று ஒரு அழகிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது ஒரு அழகான பாட்டில் விளக்கு தான். அதை எப்படி செய்வது என்று இப்பொழுது பார்க்கலாமா???????? ஒரு பழைய பாட்டில எடுத்துக் கொள்ளவும் அதன் மீது டிஸ்யூ காகிதத்தை பசையின் உதவியுடன்  ஒட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அது நன்றாக காய்ந்ததும், அதன் மீது பென்சிலைக் கொண்டு வரைய வேண்டும். பின்பு வண்ணங்களை பூசிக்கொள்ள வேண்டும். இறுதியில் கார்க் கார்  விளக்கை பொருத்தினால் அழகான பாட்டில் விளக்கு தயார்.

 மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். நீங்களும் இதே போல் தயார் செய்து உங்கள் வீட்டையும் அழகாக அலங்கரித்துக் கொள்ளவும்.




செவ்வாய், 16 ஜூலை, 2024

பிளாஸ்டிக் பாட்டில் செய்த பூந்தொட்டி


 காலை வணக்கம் நண்பர்களே.... அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? நான் நலமாக இருக்கிறேன்.

பழைய பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து ஒரு அழகான வீட்டு உபயோக பொருள் எப்படி தயார் செய்வது என்பதை இன்றைய பதிவில் காணலாம்..

ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய இரண்டு துண்டுகளையும் தலைகீழாக பொருத்திக் கொள்ளலாம். இப்பொழுது அது பார்ப்பதற்கு ஒரு கோப்பை போன்று காட்சி அளிக்கும். இரண்டு துண்டுகளையும் நன்றாக இணைத்துக் கொள்ளவும். இப்பொழுது அதன்மீது டிஷ்யூ காகிதத்தை எடுத்து பசை தடவி நன்றாக பாட்டில் தெரியாத அளவுக்கு ஒட்டிக் கொள்ளவும். நன்றாக பசை தடவி காகிதத்தை ஒட்டியவுடன் அதை காய விட வேண்டும். பாட்டில் நன்றாக காய்ந்தவுடன் அதன் மீது வெள்ளை சுண்ணாம்பு நன்றாக தடவிக் கொள்ள வேண்டும் .பாட்டில் நன்றாக காய்ந்ததும் நாம் அந்த பாட்டிலின் மேல் பகுதியை கண், காது, மூக்கு ஆகியவற்றை செய்து ஒட்ட வேண்டும் இப்படி ஒட்டிய பிறகு அதற்கு வண்ணம் பூசி தயார் செய்து கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு அழகான பூந்தொட்டி நமக்கு தயாராகி விட்டது இதனை மேஜை மேல் அலங்கார பொருளாக வைத்துக் கொள்ளலாம். இதன் செய்முறையை  வீடியோ பதிவில் தெளிவாக காணலாம் மீண்டும் ஒரு புதிய பதிவில் உங்களை சந்திக்கிறேன்.




திங்கள், 15 ஜூலை, 2024

கடல் பசு

           கடல் பசு  என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும். கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் உள்ள கடற்பசு கிட்டத்தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது. கடல் பசுவின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் எடை 60 பவுண்ட். இவை நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. அதற்குக் காரணம் இவை அதிகமாக வேட்டையாடப்படுவதே ஆகும்.


    இவை பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன கடல் பசுவின் இறைச்சி சுவை மிக்கதாக இருப்பதால் சந்தையில் இதற்கு அதிகமாக வரவேற்பு உள்ளது.
இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முறிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது.

    கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு ஆகும். கடலில் மீன் பிடி பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் இவற்றை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கிறார்கள். கடல் பாசிகளையும், கடலுக்கு அடியில் காணப்படும் நீர் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து கடல் பசு ஒரு பெரிய ஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம். கடல் பசு இறைச்சிக்காகவும், தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

       கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும். இவை பார்ப்பதற்கு டால்பின்கள் போல் இருந்தாலும் இவற்றிற்கு முதுகுத்துடுப்பு இல்லை, இதனால் இது தண்ணீருக்கு வெளியே தாவும் திறனற்றது.

இப்படிப்பட்ட அரிய வகை உயிரினங்களை காப்போம். இந்த உலகில் நாம் மட்டும் வாழவில்லை இப்படிப்பட்ட அற்புதமான மருத்துவ குணம் படைத்த அறிய வகை உயிரினங்களும் இந்த உலகில் வாழ்கின்றன என்பதை நம் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்போம் அவர்களும் இந்த உயிரினங்களை பற்றி அறிந்து கொள்ளவும் அவற்றின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்வோம்

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...