சாமந்திப் பூவில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா???
சாமந்தி பூ எளிதில் கிடைக்ககூடிய ஒன்று...
- நன்றாக காய வைத்த சாமந்திப் பூவை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து கலக்கினால் சாமந்திப் பூ தேநீர் தயார். இதை குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்து அதிகமான அளவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- சாமந்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
- தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
- உடல் பலம் பெறு சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலா ம் . அடிக்கடி சோர்வு ஏற்படாமலும் தடுக்கும்.
- சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக