நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.....
ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று ஒரு குளுமையான பானம் செய்யலாம் என்று இருக்கிறேன். ஆமாம் ஏப்ரல் மாதம் வரும் போது கூடவே கோடைகலத்தையும் அழைத்து வருகிறதல்லவா? அது மட்டுமா? கோடையின் வெப்பத்தை தணிக்க தர்பூசணி பழங்களையும் அல்லவா கொண்டு வருகின்றது.
சொல்ல மறந்து விட்டேன் அந்த பானத்தின் பெயரை தெரிஞ்சுக்க வேண்டாமா?
அந்த பானத்தின் பெயர் முகபத் கா சர்பத்.... சரி வாங்க.... இதை எப்படி செய்யலாம்னு இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் -1
பால் -1 கோப்பை
சர்க்கரை - 3 தேக்கரண்டி
ரோஸ் சிரப் - 1 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் தர்பூசணி பழத்தை விதைகள் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் பின்னர் விதை நீக்கிய பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதனுடன் ஒரு கோப்பை பால் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். கூடவே ஒரு தேக்கரண்டி ரோஸ் சிரப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும் குளு குளு முகபத் கா சர்பத் தயார்.
ஐஸ் கட்டிகளை சேர்த்து ஜில்லென்று பரிமாறவும். இந்தக் கோடையில் நீங்களும் இதை தயார் செய்து உங்கள் குடும்பத்துடன் பருகி மகிழுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக