செவ்வாய், 25 ஏப்ரல், 2023
புத்திசாலி யார்???
திங்கள், 24 ஏப்ரல், 2023
சவால்
ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
வரமா இல்லை சாபமா???
சனி, 22 ஏப்ரல், 2023
பொறுப்பு
வெள்ளி, 21 ஏப்ரல், 2023
பொறுமை
வியாழன், 20 ஏப்ரல், 2023
கட்டுப்பாடுகள்
புதன், 19 ஏப்ரல், 2023
வலிமை
செவ்வாய், 18 ஏப்ரல், 2023
நல்லதை கற்றுத் தருவோம்
பக்தி
புத்தகங்களின் மகத்துவம்
- தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன் என் சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகவத்சிங்.
- மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம் கிரேக்க நாட்டு சிந்தனைாளர் சாக்ரட்டீஸ்.
- வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் பு்த்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்நாராம் நெல்சன் மண்டேலா.
- ஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னாராம் காந்தியடிகள்.
- ஒவ்வொரு படமும் நடிகக ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நுாறு டாலர்களுக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.
- ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகந்தான் என்றார் வின்சன்ட் சேர்ச்சில்.
- தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாராம் ஜவஹர்லால் நேரு.
- புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னாராம் அறிஞர் அண்ணா.
- ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாகடர் ராதாகிருஷ்ணன்.
- “கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.
- ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. என்றார் விவேகானந்தர்.
- கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.
மாற்றம்
சனி, 15 ஏப்ரல், 2023
வைர வியாபாரி
புதன், 12 ஏப்ரல், 2023
செவ்வாய், 11 ஏப்ரல், 2023
நேசிக்க கற்றுக்கொள்
திங்கள், 10 ஏப்ரல், 2023
யார் உனக்கு குரு?
வடை போச்சே
இது கொஞ்சம் புதுசு
வெள்ளி, 7 ஏப்ரல், 2023
முயன்று பார்ப்போம்
புதன், 5 ஏப்ரல், 2023
மந்திரக் குவலை
ஜூலை 01
கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாளாகும்.. . ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது.
1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார்.
1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.
1843 – மதராஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
1858 – சார்லஸ் டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.
1862 – உருசிய மாநில நூலகம் திறக்கப்பட்டது.
1863 – நெதர்லாந்தினால் அடிமை முறை தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை ஆரம்பமானது.
1867 – பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில் கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1873 – இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.
1881 – உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.[1]
1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.
1903 – முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.
1916 – முதல் உலகப் போர்: பிரான்சின் சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக் குடியேற்றத்தை தடைச் செய்தது.
1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.
1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933 – வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை ஆரம்பமானது.
1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
1948 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை ஆரம்பித்தார்.
1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
1958 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.
1959 – பன்னாட்டு யார், பவுண்டு மற்றும் அங்குலம், மைல், அவுன்சு ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய நாடுகளில் அமுலுக்கு வந்தது.
1960 – கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.
1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.
1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1966 – கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1967 – தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது.
1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
1976 – போர்த்துகல் மதீராவுக்கு சுயாட்சி வழங்கியது.
1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது.
1980 – "ஓ கனடா" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக அங்கீகரிக்கப்பட்டது.
1983 – வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.
1991 – பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.
2004 – காசினி-ஹியூஜென்சு விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
2007 – இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.
2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1 நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.
2016 – லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.
பிறப்புகள்
1864 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912)
1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972)
1913 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000)
1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.
1927 – சந்திரசேகர், இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007)
1934 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011)
1935 – ஞானி, தமிழக எழுத்தாளர்
1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008)
1938 – துரைமுருகன், தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்
1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்
1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி
1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்
1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
இறப்புகள்
1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)
1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)
1991 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1915)
சிறப்பு நாள்
மருத்துவர்கள் நாள் - இந்தியா
படைத்துறையினரின் நாள் - சிங்கப்பூர்
கனடா நாள்
குழந்தைகள் நாள் - பாக்கித்தான்
அடிமை ஒழிப்பு நாள் - நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம்
பொறியாளர் நாள் - பகுரைன், மெக்சிக்கோ
விடுதலை நாள் - ருவாண்டா, சோமாலியா
குடியரசு நாள் - கானா
செவ்வாய், 4 ஏப்ரல், 2023
என்னது சாமந்திப் பூவை சாபிடலாமா???
சாமந்தி பூ எளிதில் கிடைக்ககூடிய ஒன்று...
- நன்றாக காய வைத்த சாமந்திப் பூவை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் வெந்நீர் சேர்த்து கலக்கினால் சாமந்திப் பூ தேநீர் தயார். இதை குடித்தால் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்து அதிகமான அளவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- சாமந்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
- தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும்.
- உடல் பலம் பெறு சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலா ம் . அடிக்கடி சோர்வு ஏற்படாமலும் தடுக்கும்.
- சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
திங்கள், 3 ஏப்ரல், 2023
தன்நிலை கர்வம்
நம் எண்ணம் தான் நமக்குச் சிறை
ஞாயிறு, 2 ஏப்ரல், 2023
ஐஸ் குச்சி டேபிள் விளக்கு
சனி, 1 ஏப்ரல், 2023
வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன
முகபத் கா சர்பத்.
This year in six words
(This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...
-
கோடையும் வந்து விட்டது கோடை விடுமுறையும் வந்தாச்சு .... குழந்தைகளை கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் வீட்டிற்குள் பல விதமான கலைகளை கற்றுக்...
-
கடல் பசு என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும் . கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கி...
-
முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்! வறுமை சூழ்நிலை எனினும், தன்மானம் இழக்கா புரட்சிக் கவிஞன்! தாழ்த்தப்பட்டவர்களை வீட்டில் சேர்த்ததால், ச...